Showing posts with label Story. Show all posts
Showing posts with label Story. Show all posts

Thursday, December 16, 2010

அம்மாவைக் காணோம்! - இறுதிப் பகுதி

அம்மாவைக் காணோம்! - 1 (இங்கே)

அம்மாவைக் காணோம்! - 2 (இங்கே)

பதட்டத்துடன்... "ஹலோ" என்றார் மாணிக்கம். மறு முனையில் பேசிய குரலை கேட்டு செய்வதறியாது முழித்தார் மாணிக்கம்.

"ஹலோ பெரியப்பா! நான் தான் ஷ்யாம் பேசறேன். கல்யாணம் முடிஞ்சாச்சா?? முஹூர்த்தம் முடியறதுக்குள்ள கால் பண்ணினா, அந்த கெட்டி மேள சத்தமாவது கேக்குமேனு போன் பண்ணினேன். அம்மா செல்லுக்கு தான் பண்ணினேன் ஆனா அம்மா எடுக்கல. எல்லாரும் பயங்கர பிஸி போல? சாரி பெரியப்பா, இந்த நேரத்துல தொந்தரவு பண்ணினதுக்கு." என்று பட படவென பேசி தீர்த்தான் ஷ்யாம்.

" ஷ்யாம் நீ தானா. நான் யாரோ என்னவோனு பயந்தே போயிட்டேன். தாலி கட்டறதுக்கு முன்னாடி நானே உன் செல்லுக்கு கூப்டறேன் " என்று எப்படியாவது ஷ்யாமிடம் இருந்து நடந்தவற்றை மறைக்க முயற்சித்தார் மாணிக்கம்.


"என்ன பயந்து போய்டீங்களா?? ஏன் வேற யாராவது கொள்ள காரங்க போன் பண்ணுவாங்கனு நெனசீங்களோ??" என்று மறு முனையில் நக்கலாக கேட்டு சிரித்துக் கொண்டிருந்தான் ஷ்யாம்.

" பயம்னா சொன்னேன்?? பதட்ட பட்டு பொய்ட்டேன்னு சொல்ல வந்து பயம்னு ஒளறி இருப்பேன்" என்று மழுப்ப முயன்றார் மாணிக்கம்.

"பதட்டமா?? எதுக்கு பதட்ட படணும்??"

என்ன சொல்லி மழுப்புவது என்று தெரியாமல் சந்தையில் காணமல் போன குழந்தை போல விழித்தார் மாணிக்கம்.

" சரி சரி நீங்களே உங்க பொண்ணு உங்கள விட்டு வேற வீட்டுக்கு போற சோகத்துல இருப்பீங்க. கல்யாணத்துக்கு என்ன மாதிரி VIP யாரும் வரலயேனு வேற உங்களுக்கு தனி கவலை இருக்கும். இதுல நான் வேற ஏன் உங்கள களாச்சு உங்க டயத்த வேஸ்ட் பண்ணனும். பத்து நிமிஷம் கழிச்சு நானே கூப்டறேன் பெரியப்பா" என்றான் ஷ்யாம்.

"இல்லை வேண்டாம். கல்யாணம் நடக்கும் போது நானே கூப்டறேன். அதாவது தாலி கட்டும் போது நானே உங்க அப்பவ விட்டு கூப்பிட சொல்றேன்" என்று தட்டு தடுமாறி முடித்தார் மாணிக்கம்.

"என்னோட செல் போன் ரிப்பேர்-ல இருக்கு. நானே என் ஆபீஸ் போன்ல இருந்து ஒரு பதினஞ்சு நிமிஷம் கழிச்சு கூப்டறேன். எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க. bye " என்று இணைப்பை துண்டித்தான் ஷ்யாம்.

இனிமேலும் காலம் தாழ்த்துவது சரி அல்ல என்ற முடிவிற்கு வந்தனர். சம்மந்தி வீட்டாருடன் கலந்தாலோசித்து ஒரு முடிவிற்கும் வந்தனர்.

மாணிக்கம் மெதுவாக மேடை அருகே சென்று உரத்த குரலில் "எல்லாரும் தாமதத்திற்கு மன்னிக்கவும். கல்யாணியைக் காணம்! அவளைத் தான் இத்தனை நேரம் தேடிக் கொண்டு இருந்தோம். இந்த இருவது நிமிஷத்துல கல்யாணியை யாராவது எங்கயாவது பாத்து இருந்தா தயவு செஞ்சு எங்க கிட்ட சொல்லுங்க. இன்னும் சில நிமிடங்கள் காத்து இருக்கலாம். அப்பாவும் கல்யாணி எங்கனு தெரியலேனா அப்புறம் என்ன பண்றதுன்னு முடிவு பண்ணலாம். எல்லாரும் அமைதியா இருங்க." என்று தழு தழுத்த குரலில் கூறினார்.

எல்லாம் அப்படியே ஒரு சில வினாடிகள் ஸ்தம்பித்து நிற்க. பின்பு அங்காங்கே கூட்டம் கூட்டமாய் பேசத் தொடங்கினர். சத்திரத்தில் இருக்கும் அனைவரிடமும் விசாரணை ஆரம்பமானது.

எல்லாரும் அவர்கள் அவர்கள் வேலையில் மும்மரமாக இருக்க, யாருக்குமே கல்யாணி எங்கே என்று தெரியவில்லை. கல்யாணியை இறுதியாய் அங்கு பார்த்தோம், இங்கு பார்த்தோம் என்ற பல தகவல்கள் மேலும் குழப்பத்தை தான் அதிகரித்தது. அந்த நேரம் பார்த்து கந்தன் சமையல் காரரிடம் "ஆமாம் உங்களுடைய இரண்டு மகன்களும் எங்கே?" என்று வினவினான்.

அவரோ " வீடு வரைக்கும் பொய் இருக்காங்க. என்னோட பொண்டாட்டிக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லை. அதான் பாத்துட்டு வரேன்னு பொய் இருக்கா ரெண்டு பெரும்." என்றார்.

கந்தனின் அருகில் இருந்த ஒருவரோ திடீரென்று " அவர்கள் பின் வாசல் வழியாக ஏதோ மூட்டை மாதிரி ஒன்ன எடுத்துட்டு போறத நான் பாத்தேன்" என்றார்.

" என்னது மூட்டையா? எவ்வளவு பெருசு இருக்கும்?" என்றார் மாணிக்கம். " அது இருக்கும்க ஒரு அஞ்சு வயசு கொழந்த ஒசரத்துக்கு" என்றார். அதே நேரம் சமையல் காரரோ "இல்லை இல்லை ஒரு மஞ்ச பையில் தான் வேண்டாத சாமான்களை குடுத்து அனுப்பினேன். எல்லா பாத்ரதையும் தூக்கிட்டு போறது கஷ்டமாயிடும் இல்லையா அதான்" என்று மழுப்பினார். அனால் அந்த புது நபரோ அடித்துக் கூறினார் அது மூட்டை தான் என்று.

எல்லோர் சந்தேகமும் இப்பொழுது சமையல் காரரின் மேல் விழ. அவர் தான் கடத்தல் காரர்களுடன் சேர்ந்து கல்யாணியை கடத்த உதவி செய்திருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.

சமையல் காரரை போட்டு குடைய ஆரம்பிக்க. அவரால் உண்மையையும் சொல்ல முடியவில்லை பொய் சொல்லவும் தெரியவில்லை. உண்மையை சொன்னால் சமையல் ஆர்டர் இனிமேல் யாரும் தர மாட்டார்கள். பொய் சொல்லி சமாளிக்க அனுபவம் இல்லை. அவருடைய வேலை ஆட்கள் உதவியும் ஒரு பிரயோஜனமும் இல்லை. சரி அவரின் வீட்டிற்க்கே சென்று பார்க்கலாம் என்ற முடிவிற்கு வந்தனர்.

ஒரு வாராக சலசலப்பு அந்த இடத்தில் நிலவ. சற்று குழப்பத்துடன் முன் வாசல் வழியாக வந்தனர் சமையல் காரரின் மன்கங்கள் இருவரும்.

"என்ன அங்க கூட்டம்?" என சின்னவன் வினவ.

"வாங்க டா திருட்டு பசங்களா... உங்கள தான் தேடிட்டு இருக்காங்க எல்லோரும். அவங்களை அமுக்கி புடிங்க டா" என கூட்டத்தில் இருந்த ஒருவர் கத்த. பொருட்களை திருடியது தான் அம்பலம் ஆகி விட்டது போலும் என்று பயந்து ஓட முயன்றனர் இருவரும்.

ஆனால் அதற்குள் அவர்களின் வழி மறித்து, இரண்டு அடி போட்டு இழுத்து வந்தனர் கூட்டத்தில் சிலர். "அடிக்காதீங்க பாவம்" என்றார் அத்தை.

"ஒரு அம்பது வயசு பொம்பளைய கடத்தி இருக்காங்க பின்ன மடியில உக்கார வெச்சு கொஞ்சவா முடியும்?" என்றார் ஒருவர்.

"அட அவங்க கடத்தினாங்களா என்னனு விசாரிக்காமலே அடிக்காதீங்க. அப்படியே தப்பு பண்ணி இருந்தாலும் நாம போலீஸ் கிட்ட தான் சொல்லணும். எல்லாரும் கொஞ்சம் விலகி இருங்க. அவங்க பயப்படாம இருந்தா தான் பேசுவாங்க" என்றான் கந்தன்.

"இங்க பாருங்க பா, என்ன உங்க அண்ணா மாதிரி நெனச்சுக்கோ. நீங்க சாக்கு மூட்டைல எதையோ கட்டி எடுத்துட்டு போனிங்களாமே? அது என்னனு ஒழுங்கா சொல்லிடுங்க" என்றான் கந்தன்.

கூட்டத்தின் நடுவே இருந்து சமையல் காரர் வாயை திறந்து எதையும் சொல்லாதே என சமிக்யை செய்ய, " அது வந்து... வந்து..." என இழுத்தான் பெரியவன். "அது வேற ஒன்னும் இல்லீங்க அண்ணா, இங்கே தேவை இல்லாத சாமான் மற்றும் குப்பைகள்" என்றான் சின்னவன்.

அவர்களின் தடுமாற்றத்தையும், பொய்யையும் கண்டு சிலருக்கு கோபம் வந்தது. நிதானத்தை மெல்ல இழக்க துவங்கினர்.

"நீங்க எதுல எல்லாத்தையும் கட்டி எடுத்துட்டு போனீங்க?" என்று வினவினாள் சித்தி.

சின்னவனோ சாமர்த்தியமாக பேசுவாதாக நினைத்துக் கொண்டு " அதான் அண்ணா சொன்னாரே சாக்குப் பை. அதுல தான்" என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.

உடனே மாமாவோ "இப்பவாவது உண்மைய ஒத்துக்கோங்க சமையல்காரரே. இல்லேனா போலீஸ் வெச்சு விசாரிக்கற விதத்துல விசாரிப்போம். ஒழுங்கா சொல்லுங்க கல்யாணி எங்கே?" என்று அவர் துண்டை பிடித்து மிரட்டினார். அவரோ கண்களில் நீர் துளிர்க்க வாய் திறக்க முடியாத நிலையில் இருந்தார்.

கூட்டத்தில் எல்லாரும் கத்த ஆரம்பிக்க. சத்தம் மெல்ல அந்த இடத்தை நிரப்பிக் கொண்டே வந்தது.

"நிறுத்துங்க!" என்றது ஒரு மெல்லிய குரல். யார் என்று எல்லோரும் திடுக்கிட்டு பார்க்க. ஒரு நாற்காலியின் மேல் எரிக் கொண்டு உரத்த குரலில் கத்தியது சமையல்காரரின் இரண்டாவது மகன்.

"என்ன திமுரு டா உனக்கு. பண்ற தப்பை எல்லாம் பண்ணிட்டு அதிகாரம் வேற பண்றியா?" என்று குச்சியை ஓங்கினார் ஒரு பெரியவர். ஓடிச் சென்று அதை தடுத்தான் கந்தன்.

"ஐயோ என்ன பேச விடுங்க. இங்க என்ன பிரச்சன? அத சொல்லாம எங்கள விசாரிச்சா எங்களுக்கு என்ன புரியும்?" என்றான் சின்னவன்.

அவன் தைரியத்தையும், துணிச்சலையும் கண்டு அனைவரும் வியந்தனர். அவர்கள் செய்த தவறும் அவர்களுக்கு மெல்ல விளங்கியது.

"என்னோட அம்மாவை ஒரு இருவத்தைந்து நிமிஷமா காணம். எல்லா எடத்துலயும் தேடியாச்சு. எங்கயும் இல்லை. நீங்க ஏதோ மூட்டைல கட்டி எடுத்துட்டு போறதா தகவல் வந்துச்சு. ஒரு வேள யாரவது கடத்தல் காரங்களுக்கு உதவி செஞ்சு இருகீங்களான்னு தெரிஞ்சுக்க தான் இங்க விசாரணை நடக்குது. இப்பவாவது சொல்லு பா அந்த மூட்டைல என்ன இருந்துச்சு?" என்று மூச்சு விடாமல் பேசினான் கந்தன்.

" என்ன கல்யாணி அம்மாவக் காணமா? வெளையாடாதீங்க. 'தலைய சுத்துது காபி கொண்டு வா டா கண்ணான்னு' அவங்க கேட்டதும் துள்ளி அடிச்சுட்டு காப்பிய குடுத்துட்டு வந்தேனே. அவங்க dining ஹால்-ல தான் இருந்தாங்க அப்ப" என்றான் சின்னவன்.

உடனே எல்லாரும் பர பரவென dining ஹால்-ஐ நோக்கி ஓட அங்கு எங்கும் கல்யாணி தென்படவில்லை. காபி குடுத்த இடத்தை நோக்கி ஓடினான் சின்னவன். அங்கே டேபிள்களில் "frill arrangements " எனப் படும் அலங்காரம் செய்யப்பட்டு இருப்பதால் அருகில் சென்று பார்த்தும் தான் தெரிந்தது கல்யாணி அங்கே மயங்கி விழுந்து கிடந்தாள்.

"அம்மா இங்க தான் இருக்காங்க!" என எல்லாரும் ஒரு வாராய் கத்த. சற்று தண்ணீர் தெளித்து கல்யாணியை எழுப்பினர்.

மெல்ல கண் திறந்த கல்யாணி "என்ன ஆச்சு? எத்தனை நேரம் இப்படியே மயங்கி கெடக்கேன்?" என்றாள். "அம்மா நீ முதல்ல கடச்சியே அதுவே போரும். மத்தத எல்லாம் அப்புறம் சொல்லறோம். உன்னைக் காணாம நாங்க தவிச்சு போய்ட்டோம். சமையல்காரர் மேல கூட சந்தேகப் பட்டோம். சக்கரை இருக்கற நீ, வேளா வேலைக்கு சாப்டனும்னு எத்தன வாட்டி சொல்லி இருக்கேன்?" என்றாள் மணப் பெண்.

"என்னை எல்லாரும் மன்னிச்சுடுங்க. பொண்ணோட கல்யாணத்துல ஓடி ஆடி வேலை செய்யறப்ப நம்ம பசி கண்ணுக்கு தெரியாம போயிடுது. எல்லாம் என் தப்பு தான். சரி நேரம் ஆகறதுக்குள்ள மண மேடைக்கு போகலாம் வாங்க" என்றாள் கல்யாணி.

"டேய் ராமு, நீ மட்டும் இங்க ஒழுங்கா தேடி இருந்தேனா இவ்வளவு அவச்த்தையும் இல்லை டா" என்றார் அத்தை. "இனிமேலாவது பதட்ட படாம ஒழுங்கா ஒரு வேலைய செய்யக் கத்துக்கங்க பசங்களா" என்று தொடர்ந்தார். "இந்த சின்ன குழந்தைக்கு இருக்கற பக்குவமும் பொறுமையும் நமக்கு இல்லை. எங்களை மன்னிச்சுடுங்க சமயல்காரரே" என்றார் அத்தை.

எல்லாரும் சமையல்காரரிடம் மன்னிப்பு கேட்க மாணிக்கமோ "நாங்க இருந்த நெலமைல என்ன யோசிக்கரதுனே புரியல. அதுனால தான் இப்படி ஒரு தவறு நடந்துடுச்சு. எங்கள கண்டிப்பா நீங்க வாய தொறந்து மன்னிச்சுட்டேன்னு சொல்லணும்" என்றார்.

"இல்லை அய்யா நீங்க எல்லாரும் தான் என்ன மன்னிக்கணும். என் சின்ன பையன் சொல்ல சொல்ல கேக்காம நானும் மண்டபத்துலருந்து கொஞ்சம் சாமான்களை திருட்டு தனமாய் வீட்டுக்கு குடுத்து அனுப்பினேன். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டு தானே ஆகணும். இனிமே பேராசை படவே மாட்டேன். அதுனால நான் பட்ட பாடு போரும்" என்றார் கண்களில் நீர் பெருக.

" உங்க தவற நாங்க மன்னிச்சுட்டோம். நீங்களும் எங்களை மன்னிச்சுடுங்க. உங்க சின்னப் பையன் மட்டும் பொறுமையா எங்க கிட்ட பெசலேனா இந்த கல்யாணம் நடந்து இருக்காது. அடடே இந்த கூத்துல கல்யாணத்த மறந்தாச்சு. வாங்க எல்லாரும் மண மேடைக்கு போகலாம். ஆமாம் நித்யா எங்க?"

"அவ மண மேடைல ரெடியா இருக்கா. நீங்க எல்லாரும் தான் பாக்கி சீக்ரமா வாங்க" என அய்யர் அங்கே இருந்து குரல் குடுக்க. "அட அவ்வளவு அவசரமா?" என மாமா நக்கல் அடிக்க. எல்லாரும் சிரித்துக் கொண்டே மண மேடையை நோக்கி நடந்தனர்.

மேளம் கொட்டவும் ஷ்யாம் போன் பண்ணவும் சரியாக இருந்தது. தாலி கட்டி முடித்ததும் மாப்பிள்ளை "நித்யா, எதுக்கும் நீ கூட யாரையாவது துணைக்கு வெச்சுக்க. ராத்திரி நேரம் பாத்து எங்கயும் காணாம போய்ட போற" என்றார். அதைக் கேட்டு நித்யா வெக்கத்தில் திரு திருவென முழிக்க, எல்லோரும் ஆனந்தக் கண்ணீருடன் மணமக்களை வாழ்த்தினர்.

நீங்களும் வாழ்த்தி விட்டு, அப்படியே போகாமல் விருந்துண்டு போகுமாறு கேட்டுக் கொள்ளுவது ஹரிணி ஸ்ரீ.




இந்தக் கதை இனிதே நிறைவு பெறுகிறது. மீண்டும் அடுத்த பதிப்பில் சந்திப்போம். அதுவரை டாடா! Bye !

Monday, November 15, 2010

அம்மாவைக் காணோம்! - 2

அம்மாவைக் காணோம்! - 1 (இங்கே)


கல்யாணி வாசல் பக்கமே வரலை என்று அங்கே இருந்தவர்கள் கூற பதட்டத்துடன் வந்து "அம்மாவைக் காணம்!" என்றான் கந்தன்.

"என்னது கல்யாணியைக் காணமா??" எனப் பதட்டத்துடன் மாணிக்கம் கூற. உடனே அவன் கையைப் பிடித்து உணர்ச்சிவசப் படாதே என்பது போல் சமிக்யை செய்தாள் அத்தை அபிராமி.

அய்யரின் காதில் மெல்ல "மணப் பெண்ணின் அம்மாவைக் காணோம்" என்றாள் அபிராமி. "என்னது பொண்ணோட அம்மாவைக் காணமா??! " என்று ஒரு அதிர்ச்சியுடன் வாயை பிளந்தார் அய்யர்.

" பதட்ட படாதீங்க. இங்கே தான் எங்கயாவது இருப்பாங்க எங்களுக்கு ஒரு பத்து நிமிஷம் தாங்க, தேடி பாக்கறோம். அது வரைக்கும் சமாளிக்க ஏதாவது பூஜை பண்ணிட்டு இருங்க" என்று கூறியவள், அவள் கணவனையும், நித்யாவின் சித்தப்பாவையும் மணவரை அருகே நிற்க வைத்து விட்டு, பதட்டம் இல்லாமல் இருக்கும் படி கூறினாள். மேலும் இரண்டு இரண்டு பேராக கீழே இறங்கி மணமகள் அறைக்கு வருமாறு கூறி விட்டு நித்யாவின் சித்தியுடன் கீழே சிரித்த வாறு இறங்கினாள்.

கீழே இறங்கி மணமகள் அறைக்கு போவதற்குள் "உங்க வீட்டுல நடக்கற முதல் கல்யாணம் எல்லாரும் ரொம்ப ஆரவாரமா இருக்கீங்க போல??" "இப்படி எல்லாரையும் சந்தோஷமா பாக்கறதே எங்க எல்லாருக்கும் நிம்மதியா இருக்கு" "ஊருக்கு உதாரணமாய் ஒற்றுமையாய் வாழும் குடும்பம்" என்றெல்லாம் போகிற வழியில், வழி மறித்து பேச்சுக் குடுக்க ஆரம்பித்தனர்.

அதில் ஒருவர் "எங்க கல்யாணிய காணம்?? இப்பவாவது வந்து மாணவரில நிக்க கூடாதா??" என்றார் என்ன சொல்வதென்று அறியாமல் முகத்தில் புன்னகையுடன் "சமையல் காரங்க ஏதோ கேட்டாங்கனு எடுத்துக் குடுக்க பொய் இருக்கா நாங்க பொய் கூட்டிட்டு வரோம்" என்று இருவரும் மழுப்பினார். இதே தொல்லை கந்தனுக்கும், அவனுடைய மற்ற உறவினர்களுக்கும் இருந்தது.

மற்றவர்கள் வருவதற்குள் நடந்தவற்றை மீண்டும் ஒரு முறை ஓட்டிப் பார்த்தாள் அபிராமி. எல்லாரும் வந்தாகி விட்டது. கந்தனையும் அவன் நண்பன் ராமு மற்றும் அபிராமியின் மகன் மூன்று பேரையும் கீழே ஒரு முறை தேடிப் பார்க்க சொன்னாள்.

நான்கு பேரை முதல் மாடிக்கும், மூன்று பேரை மொட்டை மாடிக்கும் அனுப்பினாள்.

மணமகள் அறையிலேயே காத்து இருப்பதாகவும். எல்லாரும் சரியாக ஐந்து நிமிடத்தில் இங்கு வர வேண்டும் என்றும் கூறினாள். மறக்காமல் கல்யாணியின் கைப் பேசியில் அழைத்துப் பார் எனக் கந்தனிடம் கூறினாள்.

எல்லாரும் வில்லில் இருந்து பாய்ந்த அம்பு போல் வேகமாகவும் அதே சமயம் பதட்டம் இல்லாமலும் சென்றனர். முதல் மாடியில் மொத்தம் பத்து அரை உண்டு, அதில் ஒவ்வொரு அறையாக போய் தேடிப் பார்க்க வேண்டும். சாதாரண காரியம் இல்லை. சில அறையில் ஆட்கள் இருந்தனர். சில அரை பூட்டி இருந்தது. தட்டு தடுமாறி முன்னேற வேண்டி இருந்தது.

மொட்டை மாடியில் பெரியதாக ஒன்றும் இல்லை. கீழே மணமகன் அறைக்கு போய் பார்ப்பது தான் மிகவும் கடினமான வேலை.

கந்தன் " ராமு நீ dining hall -ல போய் பாரு, நான் store room போறேன், நீ மணமகன் அறைக்கு போய் பாரு கண்ணா" என்றான்.

கண்ணன் அத்தை அபிராமியின் மகன். கண்ணன் "என்ன மணமகன் அறைக்கா?? அங்கே ஏன் வந்த எதற்கு வந்தனு கேட்டா என்ன சொல்றது??" "சும்மா சொந்தக் காரங்க எல்லாரையும் கூட்டிட்டு போலாம்னு வந்ததா சொல்லி பேச்சு வாக்குல எங்க அம்மா அங்க வந்தாங்களான்னு கேளு. பேசறதுக்கு இது நேரம் இல்லை. நான் எங்க அம்மாவோட செல் போன்-கு பண்ணி பாக்கறேன்" என்று கூறியவன் தன கை பேசியில் இருந்து கல்யாணியை அழைத்துக் கொண்டே முன்னேறினான்.

கல்யாணியின் கைப் பேசி அடித்தது. யாரும் எடுக்கவில்லை. store room பூட்டி இருந்தது. திறந்து அங்கே எங்காவது இருக்கிறாளா என்று பார்த்தான். இல்லாததால் மீண்டும் சமையல் காரர்களிடம் பேசலாம் என்று சென்றான்.

ராமு ஓடி வந்தான் "கந்தா, இது உங்க அம்மாவோட செல் தானே??" அதை வாங்கிப் பார்த்த கந்தன் ஆமாம் என்றான். "இது dining hall போற வழீல கெடந்துது அதுவும் யாரோ தூக்கி எரிஞ்சாபுல இருந்துது. பின் பக்கம் தனியாவும் முன் பக்கம் தனியாவும் இருந்துது" என்றான் பதட்டத்துடன். அய்யய்யோ அப்ப அம்மாவுக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று பதட்டத்துடன், கண்களில் நீர் வழிய மணமகள் அறையை நோக்கி ஓடினான் கந்தன்.

"அத்தை! அத்தை!! இதோ அம்மாவோட செல் போன். இது கை அலம்பர இடத்துக் கிட்ட சிதறிக் கேடந்ததா ராமு கொண்டு வந்து குடுத்தான்". மணமகள் அறையை நோக்கி ஓடுவதைக் கண்ட அபிராமியின் கணவரும் அங்கு வந்து சேர்ந்தார்.

"அப்படீனா உன் அம்மாவை யாரோ கடத்திட்டாங்களா??" என்றார் மாணிக்கம். "என்னது கடத்தலா? நமக்கு எதிரி என்று யாருமே இல்லையே?? யார் இந்த வேலைய செஞ்சு இருப்பா?" இந்த சமயம் பார்த்து உள்ளே வந்த மாலா ," என்னது கடத்தலா? யார கடத்திடாங்க??" என்றாள்.

இஞ்சி தின்ன குரங்கு போல் எல்லாரும் விழிக்க, நடந்தவற்றை சொன்னாள் அபிராமி. விஷயம் கேட்டு இடி விழுந்தது போல் ஆனாள் மாலா. "எனக்குன்னு இருந்தது ஒரே ஒரு சம்மந்தி அவங்கள யாரு கடத்தி இருக்க போறா??" என்றதும் இந்த நேரத்துலயும் அன்யோன்யதக் காட்டணுமா என்று எல்லாரும் நினைத்துக் கொண்டனர்.

"யாராவது சின்ன குழந்தைங்க கிட்ட வெளயாட குடுத்து இருப்பா. அவங்க தூக்கி வீசி இருக்கலாம். எதையும் கற்பனை செய்யாம மத்தவங்க வர வரைக்கும் அமைதியா இருங்க."

"எப்படி அமைதியா இருக்கறது??? எனக்கு தலையே சுத்தரா போல இருக்கு" என்றார் மாலா.

தேடிச் சென்ற மற்ற அனைவரும் வந்து சேர கல்யாணி அந்த மண்டபத்தில் இல்லை என்ற முடிவுக்கு வந்தனர். மாலாவும் அவள் கணவனிடம் சொல்லி
எல்லா அறையையும் திறந்து மீண்டும் தேடிப் பார்க்கும் படி சொன்னாள்.

கந்தனோ "நான் மீண்டும் சமையல் காரர்களிடம் என்ன நடந்தது என்று கேட்டு விட்டு வருகிறேன்" என்று சொன்னான்.

கண்ணீரை துடைத்துக் கொண்டு வேகமாய் வேட்டியை பிடித்த படி ஓடினான்.

சமயலறையில்..

"அம்மா இங்க வந்தாங்களா??" "இல்லையே தம்பி. இப்ப தானே வந்து கேட்டுட்டு போன. அப்பவே வந்துட்டு போய்டாங்க பா". "அம்மாவைக் காணோம்! நீங்க எப்ப கடைசீயா பாதீங்கனு சொன்னா எனக்கு உதவியா இருக்கும்".

"என்னது அம்மாவைக் காணமா?? அப்ப கல்யாணம் நடக்காதா?? நாங்க இலை போட வேண்டாமா??". " என்னங்க நீங்க எங்க கஷ்டம் புரியாம. அம்மாவை கடைசீயா எப்ப பாத்தீங்கன்னு மட்டும் சொல்லுங்க" என்று அதட்டும் தோரணையில் கூறினான் கந்தன்.

" இருவது இருவத்தஞ்சு நிமிஷம் இருக்கும் பா" என்றார். மறு பேச்சு பேசாமல் கெளம்பினான் கந்தன். இலை பரிமாறுவதை நிறுத்தி விடுமாறு கூறி விட்டு, இரண்டு மூன்று பேருடன் என்ன நடக்கிறது என்று பார்க்க வெளியில் வந்தார் தலைமை சமையல் காரர்.

இப்பொழுது எல்லார் மனதில் இருக்கும் ஒரே கேள்வி, "கல்யாணி எங்கே??" எனபது தான். மண்டபத்தில் இருக்கும் ஒரு சிலருக்கு, ஒரு வாராக என்ன நடக்கிறது என்றும் புரிந்து விட்டது.

மணமகள் அறையில்...

அபிராமியின் கணவர் "ஒரு வேளை கல்யாணத்த நிறுத்தனும்னு யாரவது இவள தூக்கிட்டு போய்டாங்களோ?? ச என்னமா ஐடியா பண்ணி இருக்காங்க" என்றார்.

அபிராமி ஒரு முறை முறைத்ததும் "இல்ல மா நான் என்ன சொல்ல வரேன்னா..." "நீங்க சொன்னதே போதும் பேசாம இருங்க" என்றாள் அபி.

அந்த நேரத்தில் மாணிக்கத்தின் கைப் பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. "ஏதோ முன் பின் தெரியாத எண்" என்றார் மாணிக்கம். எல்லாரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க. "அந்த காலை அட்டென்ட் பண்ணுங்க பா" என்றான் கந்தன். "தைரியமா பேசுங்க" என்றார் மாமா.

பதட்டத்துடன்... "ஹலோ" என்றார் மாணிக்கம். மறு முனையில் பேசிய குரலை கேட்டு செய்வதறியாது முழித்தார் மாணிக்கம்.

Thursday, November 4, 2010

அம்மாவைக் காணோம்! - 1

" 9 முதல் 10 .30 முஹூர்த்தம். இன்னும் 10 நிமிஷம் கூட இல்ல ஒன்பது மணி ஆக. இன்னும் அம்மாவும் பொண்ணும் என்ன தான் பண்ணிட்டு இருக்கா?? " என்று பதட்டத்துடன் தன் பையனை பார்த்து வினவினார் மாணிக்கம்.
"அம்மா காலை டிப்பனை நிறுத்திக்கலாம்னு சமையல் காரங்க கிட்ட சொல்ல பொய் இருக்காங்க. நித்யா எப்பவும் போல கண்ணாடி முன்னாடி நின்னு அழகு பாத்து, பாத்து மேக் அப் பண்ணிக்கிட்டு இருக்கா." என்று கூறிக்கொண்டே மணமகள் அறையை நோக்கி நடந்தான் கந்தன்.

டொக்! டொக்! (அவன் மணமகள் அரைக் கதவை தட்டும் சத்தம்)
உள்ளே... "யாரு அது நேரம் காலம் தெரியாம கதவத் தட்டிட்டு??" என்றது ஒரு குரல். "யாரா இருந்தாலும் ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணட்டும்" என்றது இன்னொரு குரல். "இந்த ஆம்பளைங்களே இப்படி தான் பொறுமையே கெடயாது" என்று கூறிக் கொண்டே லேசாக ஒரு கண் மட்டும் தெரியும் அளவிற்கு கதவை திறந்தாள் ஒரு பெண்.

"நீ தானா! கந்தா என்ன வேணும் உனக்கு இப்ப?"
"முடிக்க வேண்டிய சடங்கு எல்லாம் அப்படியே இருக்கு, இங்க உங்க மருமக என்ன தான் பண்ணிட்டு இருக்கா?? அப்பா பதட்டதோட வெளிய இருக்கார். பண்ணின வரைக்கும் போதும் வெளிய வர சொல்லுங்க."
"வருவா வருவா இன்னும் 10 நிமிஷம். டச் அப் நடக்குது. முடிஞ்சதும் நானே கூட்டிட்டு வரேன்னு உங்க அப்பன் கிட்ட சொல்லு. சும்மா கெடந்து குதிக்காம மேடை மேல போய் நிக்க சொல்லு."

"அது இல்ல அத்த ..."
"சொல்றது காதுல கேட்டுச்சு ல பத்து நிமிஷம் வரலேனா திரும்ப வந்து பாரு டா வெட்டி பயலே" என்று சொல்லி முடிக்கும் முன்பே கதவை சாத்தினாள் கந்தனின் அத்தை.

தலை சொரிந்த வாறே வேறு வழி இல்லாமல் அப்பாவிடம் நடந்தவற்றை எல்லாம் கூறினான். "அக்கா சொல்லுக்கு மறு பேச்சு ஏது?? சரி நீ போய் உங்க அம்மாவை சீக்கிரமா மேடைக்கு வர சொல்லு" என்று கூறி விட்டு மேடையை நோக்கி நடந்தார்.

"மாமா எல்லாரையும் கூட்டிகிட்டு மேடைக்கு போங்க. இங்கயே உக்காந்துட்டு இருக்கணும்னு உங்க பொண்டாட்டி சொன்னாங்களா?? "
"அட நீ வேற ஏன் டா அவள நல்ல மூட்-ல இருக்கும் பொது ஞாபக படுத்தற?? எங்கயாவது உன் பின்னாடி ஒளிஞ்சு இருந்து கேட்டுட போறா.." என்று கூறிய வாறே கந்தனின் பின்னாடி எட்டிப் பார்த்தார் அவன் மாமா.

தன் உறவினர்களை ஒவ்வொருவராக மேடை அருகே செல்லுமாறு கூறி விட்டு, தெரிந்தவர்களிடம் காலை சிற்றுண்டி ஓவரா என உரிமையுடன் விசாரித்தார்.

"கந்தா கந்தா இங்க வா டா" வாசல் அருகே இருந்து சித்தியின் குரல் கேட்டு அந்த திசையை நோக்கி நடந்தான். வழியிலேயே அவன் தெரிந்து கொண்டான் அவன் நண்பர்கள் சிலர் வந்திருந்தனர். "வாங்க டா வாங்க, நல்லா சீக்கிரம் வந்தீங்க டா. போங்க போய் முதல்ல இட்லி அ பிச்சு போடுங்க அப்புறமா நம்ம கடலைய வெச்சுக்கலாம். எல்லாரும் சாயங்காலம் வரைக்கும் இருந்துட்டு தான் போகணும்". என்றவன் அவர்களை அழைத்துக் கொண்டு dining hall -ஐ நோக்கி நடந்தான்.

உள்ளே நுழைந்தவன் "அம்மா, நீ இங்க தான் இன்னும் இருக்கியா? prime minister -அ கூட பாத்துடலாம் போல, ஆனா காலேல இருந்து உன்ன தான் பாக்கவே முடியல." "என்ன டா பண்றது செல்லப் பொண்ணோட கல்யாணமாச்சே. எந்தக் கொறையும் வந்துடக் கூடாது. உங்க அப்பா வேற ஒரு டென்ஷன் பார்ட்டி." என்று சிரிப்பும், கேள்விக்குறியும் கலந்த ஒரு புன்னகை குடுத்தாலள் கல்யாணி.
"இவங்க எல்லாம் என்னோட ஆபீஸ்-ல வேல பாக்கறவங்க மா. இவங்களுக்கும் டிபன் போட சொல்லு."
"அடடே வாங்க வாங்க! என்ன இவ்வளவு லேட்-ஆ வந்து இருக்கீங்க?
சாயங்காலம் வரைக்கும் இருந்துட்டு தான் போகணும்."
"கண்டிப்பா மா இது நம்ம வீட்டு கல்யாணம் மாதிரி" என்றான் கூட்டத்தில் ஒருவன்.
" மாஸ்டர் இவங்க எல்லாம் என் பையனோட friends இவங்கள நல்லா கவனிச்சுக்கோங்க" என்று அங்கே தலைமை ஆளிடம் கொஞ்சம் அதிகாரம் கலந்த தோரணையில் கூறினாள் கல்யாணி.

"ஆமாம் எங்க டா அந்த தடி பசங்க ராமு, பாபு, குமார் மூணு பெரும்??"என்று கல்யாணி கேட்டு முடிப்பதற்குள், "இதோ வந்தாச்சு மா"என்று கூறிக் கொண்டு பளிச் புன்னகையுடன் dining ஹாலுக்குள் நுழைந்தனர். கையை ஓங்கியவாறே "ஏன் டா தடி பசங்களா இது உங்க தங்கச்சி கல்யாணம்கறது மறந்து போச்சா? எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சுட்டு கல்யானத்தன்னிக்கி லேட்- அ வரர்தா??"

"சாரி மா கொஞ்சம் தானே லேட் ஆச்சு அதான் ஒன்பது மணிக்குள்ள வந்துட்டோமே." "சரி சரி வள வளநு பேசாம போய் சாப்டுங்க. டிபன் கடைய இன்னும் பத்து நிமிஷம் extend பண்ண சொல்லி இருக்கேன். சீக்கிரமா போய் சாப்டுட்டு வாங்க"

" டாய் கந்தா இவங்கள எல்லாம் பக்கத்துல இருந்து கவனிச்சுக்க" என்று கூறியவள் பரபரப்புடன் சம்மந்தி இருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள். " நீங்க எல்லாரும் டிபன் சாப்டாச்சு தானே?? இன்னும் பத்து நிமிஷத்துல நான் டிபன் அ நிறுத்த சொல்லலாம்னு இருக்கேன். உங்கள் வீட்டுல யாரவது இன்னும் வரணுமா? சம்மந்தி" என்று கேட்டவளை நோக்கி " காலேல இருந்து இதையே நீங்க மூணாவது தடவ எங்க கிட்ட கேக்கறீங்க. உங்க உபசரிப்ப பாத்து நாங்க எல்லாம் மூக்கு மேல வெரல வெச்சுட்டோம்" என்று சிரித்த படியே சொன்னாள் மாலா.

இப்படி ஒத்துப் போகும் சம்மந்திகளா என்று அங்கிருந்தவர்கள் வயிறு பற்றி எரிவது தெரியாமலே இருவரும் ஒருவர் கை பிடித்து இன்னொருவர் அறையை விட்டு வெளியே வந்து மண மேடையை நோக்கி நடந்தனர்.

"ஆமாம் நித்யா எங்க?? இன்னும் ரெடி ஆகலையா??" "என்னிக்கு உன் பொண்ணு டயத்துக்கு ரெடி ஆகி இருக்கா?? நீயே போய் பாரு" என்றார் மாணிக்கம்.

"வேண்டாம் வேண்டாம் அதோ என் பொண்டாட்டி உங்க பொண்ண கூட்டிகிட்டு வரா" என்றார் மாமா முத்து. அந்த மண்டபத்தில் இருக்கும் அனைவரும் அசந்து போகும் வண்ணமும், மாப்பிள்ளை பார்த்த இடத்திலேயே மயங்கி விழுந்துவிடும் அளவிற்கும், அன்று அவள் தான் ராணி மற்றவர் யாரும் அவள் அருகில் கூட நிற்க முடியாது என்ற அளவிற்கு தன்னை அழகு படுத்திக் கொண்டிருந்தாள் நித்யா.

"இந்த செவப்பு செல உங்க மருமக நிறத்துக்கு மிக எடுப்பு. பாத்தா எடத்துலயே பட்டுன்னு உங்க பையன் விழுந்துடப் போறான்" என்றார் நய்யாண்டியாக உறவினர் சிலர். அதைக் கேட்டு மற்ற மாமியாரை போல் பொறாமை கொள்ளாமல் பெருமிதம் கொண்டாள் மாலா.

ஒரு சில நிமிடங்கள் நடக்க வேண்டிய சடங்குகள் எல்லாம் முடிந்த பின். கூரைப் புடவையை குடுத்தனர். அவர்களின் சம்பிரதாயப் படி "நூல் சேலையே" அணிய வேண்டும். ஆகவே ஒரு மஞ்சள் நிற காட்டன் புடவையும் அதற்க்கு எதார் போல் ரவிக்கையும் இருந்தது அந்த தட்டில். அதைப் பெற்றுக் கொண்டு அங்கே இருந்து உடை மாற்ற மணமகள் அறைக்கு சென்றாள். கூடவே அம்மா, மாமி மற்றும் சில உறவினர்களும் சென்றனர்.

அய்யர் "பத்து நிமிஷத்துக்குள்ள வர சொல்லுங்க. ரொம்ப லேட் பண்ணிட போறாங்க" என்றார்.
"இவ பண்ணற கூத்து அய்யருக்கு கூட தெரிஞ்சு போச்சு பா" என்றான் கந்தன்.

எல்லாரும் கல கலவென சிரிக்க நித்யா மட்டும் கோபமும் சிரிப்பும் கலந்த உணர்ச்சியை வெளிப் படுத்தினாள். "அண்ணி நான் சமையல் காரங்களுக்கு ஏதாவது வேணுமான்னு கேட்டுட்டு வந்துடறேன். நீங்க கொஞ்சம் இவள பாத்துக்கங்க" என்றாள் கல்யாணி.
எல்லா பெண்களும் அறையில் நுழைந்து கதவை சாற்றியதும், சமையலறையை நோக்கி நடந்தாள் கல்யாணி.
"என்ன எல்லாம் ரெடி தானே?? தாலி கட்ட இன்னும் இருவது முப்பது நிமிஷம் தான் இருக்கு. தாலி கட்டின ஒடனே இங்க எலையப் போட்டுடனும் தெரிஞ்சுதா??" என்றாள்.
"எல்லாம் ரெடி ஆ இருக்கு மேடம். நீங்க வேணும்னா ஏதாவது ருசி பாக்கறீங்களா??" என்றார் ஹெட் குக்.
"இல்ல இல்ல எனக்கு தலைக்கு மேல வேல இருக்கு இந்தப் பக்கம் எட்டி பாத்துட்டு போலாமேன்னு வந்தேன்" என்று சொல்லிக் கொண்டே சமையல் அறையின் வாசலை அடைந்தாள்.
"இந்த அம்மாவுக்கு இதே பொழப்பா போச்சு இதோட பத்து தடவ வந்துட்டாங்க..." என போலம்பிக்கொண்டே வேலையே முடுக்கி விட்டார்.

பத்து நிமிடங்கள் கழித்தும் மணப் பெண் வராததால் அவளை சென்று பார்க்க மீண்டும் கந்தன் பலி ஆடாக கேளம்பினான். பத்து பெண்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு அவன் படும் பாடு அவனுக்கு தான் தெரியும். முனகிக் கொண்டே சென்றான்.


சமயலறையில்...
"டேய்! சின்னவனே இங்க ஒரு பை இருக்கு அதுல முந்திரி, காய் கரி, நெய், அரிசி எல்லாம் எடுத்து வெச்சு இருக்கேன். நீயும் பெரியவனும் பின் பக்கமா பொய் வீட்டுல இதக் குடுத்துட்டு வந்துடுங்க டா" என்றார் ஹெட் குக்.
"இதோ வரேன் பா, அங்க அம்மாவுக்கு காபி குடுத்துட்டு வந்துடறேன்" என்று டம்ளர்-இல் காபியை எடுத்துக் கொண்டு குடு குடுவென ஓடினான்.
"எந்த அம்மாக்கு டா இப்ப காபி கொண்டு போற?? காபி நேரமெல்லாம் முடிஞ்சு போச்சே?? இங்க வேற, இருக்கற அதனை பொம்பளைங்களும் ஆட்சி செய்யறாங்க. வாயத் தொறந்துஒண்ணும் பேச முடியல" என்று அலுத்துக் கொண்டார்.

"வந்துட்டேன் பா" பை எங்க?? தாலி கற்றதுக்குள்ள வந்துடணும்" என்றவன் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடினான்.
"contract விடாம எல்லாத்தையும் அவங்களே வாங்கிக் குடுத்தா நமக்கு இப்படி தான் நெறைய கஷ்ட்டம். எல்லாம் அந்த ஓரமா இருக்கு. யாரவது ஏதாவது கேட்டா குப்பை அது இதுன்னு சொல்லி சமாளிச்சுக்காங்க. யார் கண்ணுலயும் படாம போங்க டா" என்றார். பெரியவன் வண்டியில் காத்துக் கொண்டிருக்க, சின்னவனும் பையுடன் அவனை அடைந்தான்.

மணமகள் அரை...
"இந்தா இந்த காபி அ குடி எவ்வளவு வாட்டி சொல்றது நித்யா உனக்கு?? அப்பவே கொண்டு வந்து வெச்சாச்சு. தண்ணி மாறி ஆயிடுச்சு. வெறும் வயிரா இருந்தா அபசகுனமா மயக்கம் போட்டு தான் விழனும். நான் சொல்றத நீயாவது கேளு. உங்க மாமா மாறி படுத்தாத " என்றாள் அத்தை.
அந்தக் காபியை வாங்கி மேக் அப் கலையாமல் வாயில் பட்டும் படாமல் ஊற்றிக் கொண்டாள்.

"சரி மேடைக்கு கெளம்பலாம் இல்லேனா உன் அண்ணன் திரும்ப வந்துடுவான்." என்றார் அத்தை. வாசலில் இருந்த சித்தியை அழைத்துக் கொண்டு மண மேடைக்கு வந்தான் கந்தன். மணப் பெண்ணும் வர அய்யர் "பொண்ணோட அம்மாவை கூப்டுங்கோ" என்றார்.

"கல்யாணி எங்க?? இந்த நேரம்பாத்து எங்க போனா??" என்றார் மாணிக்கம். "சமையல் அறைக்கு போறேன்னு சொன்னாளே இன்னுமா இங்க வரல?" என்றார் அத்தை.

"இல்லையே அக்கா நாங்க, உங்க கூட இருக்கறதா இல்ல நெனசுக்கிட்டோம்?" என்று மாணிக்கம் கூற. ராமுவை அனுப்பி சமயலறையில் இருக்கும் அம்மாவை அழைத்து வருமாறு கந்தன் கூறினான். 10 -எ வினாடியில் அங்கே அம்மா இல்லை என்று கூறிக் கொண்டே வந்தான் ராமு.

"என்னது அம்மா அங்க இல்லையா? நல்ல பாத்தியா??" "ஆமாம் சமையல் காரர் அப்பவே போய்டதா சொல்றார்."

" சரி திரும்ப ஒரு வாட்டி எல்லா எடத்துலயும் பொய் பாத்துட்டு வாங்க பா" என்றார் சித்தி.

"குமார் நீ பொய் சமையல் கட்டுல பாரு, நீ மாடில பாரு ராமு, நீ மொட்ட மாடில பாரு டா பாபு நான் இங்க பாக்கறேன்" என்று சொன்னான் கந்தன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கமாய் போய் பார்க்க. கூட்டத்தில் இருகிராளா என்று தேடினார்கள் உறவினர்கள்.

கந்தன் "அம்மா எந்த ரூம்லயும் இல்ல அத்த" "டை கந்தா உங்க அம்மா கிட்சேன்-ல இல்ல டா, அப்பவே போய்டதா அந்த சமையல் காரர் சொல்லறார்." "மாடிலையும் இல்ல. மொட்ட மாடிலையும் இல்ல" என்றது இரண்டு குரல்.

"அப்ப கல்யாணி எங்க தான் போனா??" என்று பதட்டத்துடன் கேட்டாள் அத்தை. வெளியே எங்காவது சென்றிருக்கிராளா என்று பார்த்து விட்டு வரும் படி கந்தனை அனுப்பினாள். கல்யாணி வாசல் பக்கமே வரலை என்று அங்கே இருந்தவர்கள் கூற பதட்டத்துடன் வந்து "அம்மாவைக் காணம்!" என்றான் கந்தன்.

என்ன டா இது வந்த உடனே தொடர் கதையோ அல்லது மர்மக் கதையோ எழுத ஆரம்பிச்சுட்டா-நு நேனைக்காரவங்க "wait and watch! :P ". அடுத்த பதிப்பில் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது ஹரிணி ஸ்ரீ! ஹரிணி ஸ்ரீ!! ஹரிணி ஸ்ரீ!!!

Tuesday, April 27, 2010

அந்த ஒரு மணி நேரம்!

அவன் அந்த Dominos Pizza கடைக்கு வந்து சரியாக நான்கு நிமிடங்கள் ஆகிறது. கண்கள் இரண்டும் பறந்து விரிந்து ரோட்டையே பார்த்துக் கொண்டு
இருக்க அவன் கண்ணில் சற்று படபடப்பும், தவிப்பும், எதிர்பார்ப்பும்தெரிகிறது.

சற்று மெலிந்தும், நல்ல உயரமும், மாநிறமும், அரும்பு மீசையும் கொண்ட 21 வயது B .E . முடித்து, GRE படிக்கிறேன் பேர் வழி என்று, அப்பன் காசில் ஊரை சுற்றிக் கொண்டிருக்கும் அவன் பெயர் சீனு செல்லமாக "scene " சீனு என்று அழைக்கப் படும் அவன் காத்திருப்பது ஒரு பெண்ணிற்க்காக (நீங்கள் நினைத்தது சரி தான்). Watchஐயும் ரோட்டையும் மாறி மாறி பார்த்த படி அவன் நின்று கொண்டிருந்தான்.

திடீரென்று அவன் கண்ணில் ஒரு சந்தோஷம். 1000 வாட்ஸ் பல்பு போல பிரகாசமாய் எரிந்தது அவன் முகம். அவன் நிற்கும் மரத்தருகே வந்து நின்றது ஒரு ஆட்டோ. வேகமாக ஒரு அரை விட்டால் இறந்து விடும் தோற்றத்துடன், முகம் மிக அழகுடனும் ஒரு tube tops மற்றும் tight jeans உடன் கையில் சிறியதாக ஒரு பையுடன் காணப்பட்ட அவள் பெயர் ப்ரியா. மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கின்றாள்.

பிரியா: ஹாய் சீன் எப்ப வந்த?
சீனு: இப்ப தான் ப்ரியா வந்து 5 minutes ஆச்சு.
ப்ரியா: சாரி டா! ரோடு-ல ரொம்ப டிராபிக். வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.

ஜோடி 2 :

காந்தி சிலை அருகே இருக்கும் ஒரு சில பேர்களின் நடுவே, கண்ணில் பதற்றத்துடனும், அவ்வப்பொழுது எப்பொழுது விழுந்து விடுமோ கண்ணீர், என்ற பயத்துடனும் அமர்ந்திருந்தாள் ஸ்வர்ணலதா என்கிற ஸ்வர்ணா. அவளை நோக்கி பாதி ஓடிய படியும், பாதி நடந்த படியுமாக வந்தான் ஆனந்த். ஆனந்த் வருவதை பார்த்து ஸ்வர்ணா எழுந்தாள்.

ஆனந்த்: சாரி டா! ரோடு-ல ரொம்ப டிராபிக். வண்டி ஓட்டிண்டு வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடறது.
ஸ்வர்ண: பரவா இல்லை. வாங்க உள்ள போகலாம்.

இருவரும் பீச்-ஐ நோக்கி உள்ளே ஆள் சற்று கம்மியாக இருக்கும் இடமாக பார்த்து நடந்தார்கள்.

ஜோடி 1 :
ப்ரியா: வா உள்ள போகலாம்.
இருவரும் ஒரு ஓரமாய் இருக்கும் டேபிள்-ஐ தேர்ந்தெடுத்து அமர்ந்தனர். R . K . சாலையில் உள்ள திறந்த வெளியுடன் கூடிய pizza கடை அது.
சீனு: சரி நான் பொய் ஏதாவது ஆர்டர் பண்ணிட்டு வரேன்.
என்று கூறி உள்ளே சென்றான். 5 நிமிடங்களில் கையில் ஒரு பில்-உடன் வந்தான். வந்தவன் அவளுக்கு எதிரில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்தான்.

ப்ரியா: (அவன் கையில் இருக்கும் பில்-ஐ வாங்கி பார்த்து விட்டு) நல்ல வேளை, "thin crust " ஆர்டர் பண்ணின. நான் இப்ப தான் லைட் ஆ சாப்டுட்டு வரேன்.
சீனு: (அவன் மனதிற்குள்) "நாம முன்ன பின்ன இந்த எழவ தின்னு இருந்தா தான நமக்கு தெரியும்?? ஏதோ குத்து மதிப்பா ஆர்டர் பண்ணினது நமக்கு சாதகமா முடிஞ்சுது டா சாமி" என்று நினைத்து சிரித்துக் கொண்டான்.

சீனு: Pizza வர எப்டியும் 15 நிமிடங்கள் ஆகும் ஏதாவது பேசேன்.
ப்ரியா: என்ன பேசறது??

ஜோடி 2 :
ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத, வெளிச்சமும் அதிகம் இல்லாத ஒரு இடமாக பார்த்து இருவரும் மெளனமாக அமர்ந்து கொண்டிருன்தனர்.

ஆனந்த்: ஏதாவது பேசேன்??
ஸ்வர்ணா: என்ன பேசறது?? எத பத்தி பேசறது?? நம்ம காதல பத்தியா? இல்ல அது சுனாமி வந்து அடிச்சுட்டு போனா மாறி நம்ம வாழ்க்கையே நாசம் பண்ணிடுச்சே அத பத்தியா?
ஆனந்த்: இன்னிக்கி நாம எதாவது ஒண்ணு முடிவு பண்ணியே ஆகணும். நாம எடுக்க போற முடிவைப் பத்தி பேசலாம்.

ஜோடி 1 :
சீனு: உன்னோட முடிவ பத்தி?? இன்னிக்கி சொல்றேன்னு சொன்னியே??
ப்ரியா: என்ன அவசரம் போகும் பொது சொல்லலாம்னு நெனச்சேன். OK இப்பவே சொல்லிடறேன். நீ இந்த chair -ல வந்து உக்காரு.
சீனு எழுந்து அவள் அருகில் இருக்கும் நாற்காலியில் உக்கார்ந்தான்.

ப்ரியா: (அவன் கையை பிடித்துக் கொண்டு) I love you .
அவ்வளவு தான் சீனு முகத்தில் 10000 வாட்ட்ஸ் பல்பு பிரகாசமாக எரிந்தது. (நெறைய சுவிட்ச் வெச்சுண்டு இருக்கான் அம்பி situation-கு தகுந்தாப்ல பட்டன்-ஐ தட்டிடுவான்).

சீனு: thank you . (ஆனால் அவன் மனதில்) "ச, சாதரணமான என்னால இவள மாறி பொண்ண உஷார் பண்ண முடியாதுன்னு நெனச்சேன். இனிமே என் friends முன்னாடி நல்லா சீன் போடலாம்" என்று நினைத்துக் கொண்டான். அதில் அவன் சந்தோசம் இரட்டிப்பு ஆனது.

ப்ரியா: (அவள் மனதில்) "கொஞ்ச நாள் சுற்றுவோம் சரி வரலேனா கழட்டி விட்டுடலாம்."
அவள் இங்கு வருவதற்கு முன்னமே சுமார் 1 மணி நேரம் அவள் தோழிகள் அவளுக்கு 1008 எச்சரிக்கைகளை குடுத்தனர், ஒரு burger shop - இல் உக்கார வைத்து. அங்கே சும்மாவா இருந்திருப்பார்கள். வயிறு நிறைய கொட்டியும் கொண்டாகிவிட்டது. இப்பொழுது உங்களுக்கு புரிகிறதா அவள் thin crust ஆர்டர் பண்ணியவனை பாராட்டியதற்கு காரணம்.
(கதையின் நடுவில் என்ன வள வளன்னு பேச்சு அப்டீன்னு நீங்க நினைக்கறது தெரியுது :P ). ப்ரியாவும், scene உம் ஒருவர் கையை ஒருவர் பிடித்த படி கண் கொட்டாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தார்கள்.

சர்வர்: சார், யுவர் coke.
ப்ரியாவும் சீனுவும் அவர்களின் தலையில் இடி விழுந்தால் கூட தெரியாதது மாறி உக்காந்து கொண்டு இருந்தார்கள்.

மீண்டும் சர்வர்: சார் நீங்க ஆர்டர் பண்ணின coke . எங்க வைக்கட்டும்??

ப்ரியாவும் சீனுவும் அவங்க ஆர்டர் பண்ணின pizza வ நாய் கவ்விண்டு போனா கூட கவலை பட மாட்டாங்க போல. தலையில் அடித்துக் கொள்ளாத கொறையா அந்த coke -ஐ டேபிள் மேல் வைத்து விட்டு சர்வர் உள்ளே சென்று விட்டான்.

அந்த வோடபோன் விளம்பரம் ஒன்றில் திருடிட்டு போறது கூட தெரியாத மாதிரி தொலைகாட்சி-யில் தொலைந்து பொய் இருக்குமே ஒரு ஜூ ஜூ அது மாதிரி இவங்க ரெண்டு பெரும் உக்காந்துண்டு இருந்தாங்க.

( A ) திடீரென்று ப்ரியா அவள் தலையை குனிந்து அவன் கைகளில் முத்தமிட்டாள். (வாசகர்கள் A rating -ஐ கவனிக்கவில்லை என்றால் ஒரு முறை மீண்டும் கவனித்து விட்டு அந்த வாசகத்தை படிக்காமல் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்)

சீனு: அட டா நீ இங்க முத்தம் குடுத்தா எனக்கு முட்டில சில்லுனு இருக்கு. (இப்ப இவன் மூஞ்சில எந்த வாட்ஸ் பல்பும் எரியல அசடு வழிஞ்சதுல பல்பு fuse ஆ போச்சு)
ப்ரியா குனிந்து பார்த்து விட்டு, கல கலவென்று சிரித்தாள். அவள் சிரிபொலி வெய்யில் காலத்து குல்பி வண்டி-யின் மணி ஓசை மாதிரியே இவனுக்கு கேட்டது. சீனுவும் கீழே குனிந்து பார்த்து விட்டு coke வந்திருப்பதை கவனித்தான்.

சீனு: coke -ஐ ஓபன் பண்ணவா??
ப்ரியா: ok
இருவரும் இங்கே coke குடிக்கட்டும் நாம் இவர்களிடம் இருந்து ஒரு கூல் ட்ரிங்க்ஸ் பிரேக் எடுத்துக் கொள்வோம்.

ஜோடி 2:

ஸ்வர்ணா: OK . நீங்களே பேசுங்க.
ஆனந்த்: இல்ல இப்ப நீ தான் பேசணும். உன் மனசுல இருக்கறத கொட்டி தீத்துடு.
ஸ்வர்ணா: ஊர்ல உலகத்துல காதல்ங்கற பேர்ல பல பேர் காம வெறி பிடிச்சு ஆலயராங்களே அந்த மாதிரியா நாம காதல் பண்ண ஆரம்பிச்சோம்?? ஒருத்தருக்கொருத்தர் படிக்கும் போதே நல்லா உதவி பண்ணிகிட்டோம். படிச்சு முடிக்கற வரைக்கும் நமக்குள்ள நட்புங்கற எல்லை கோட்டை தாண்டி வேற ஏதாவது உணர்ச்சி எட்டி பாத்து இருக்கா?
ஆனந்த்: ஹ்ம்ம் இல்ல!
ஸ்வர்ணா: வாழ் நாள் பூரா கூட இருந்தா, ஒருத்தருக்கொருத்தர் நல்ல ஆதரவா இருப்போம். நாம நல்ல புரிஞ்சு வெச்சுண்டு இருக்கோம். ஒருத்தர் மேல ஒருத்தர் நல்ல நம்பிக்கை வெச்சு இருக்கோம். இதை எல்லாம் நினைச்சு தானே கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணினோம்?

ஆனந்த்: ஆமாம்.
ஸ்வர்ணா: இப்ப கூட மத்த ஜோடிங்க மாறி நாம என்ன ஊரு பூராவா சுத்தறோம்?? ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா இருக்கணும். நம்ம அன்பு வாழ் நாள் பூறா தொடரணும்-னு நெனச்சது தப்பா??
ஆனந்த்: தப்பில்லை தான். ஆனா இத எல்லாம் பேசி என்ன ஆக போகுது?? இனிமே நடக்க போறத பத்தி பேசு மா.

ஸ்வர்ணா: இனிமே என்ன நடக்கும் நான் அவன கல்யாணம் பண்ணிண்டு, உங்கள மனசுலயும் அவன உடம்புலயும் சொமக்கணும். இல்லேனா என்ன ரெண்டு மொழம் கயிறு சுமக்கணும். இப்படி எல்லாம் சினிமா டயலாக் பேச நான்
தயாரா இல்ல. ஏதாவது பிரக்டிகல் ஆ பண்ணியாகணும். கல்யாண பத்திரிகை அடிக்க இன்னும் ரெண்டு வாரம் தான் இருக்கு.

என்ன தான் வீரா வேசமா பேசினாலும் அவள் கண்களில் இருந்து கண்ணீர் துளி, துளியாய் மே மாத சென்னை மழை போல துளிர்த்தது. அதை ஆனந்த் தெரிந்துகொள்ளாமல் இறுக்க,
ஸ்வர்ணா: எனக்கு பசிக்கறது. ஏதாவது வாங்கிண்டு வரியா?

மறு மொழி சொல்லாமல் ஆனந்த் அவன் மனதை அங்கேயே விட்டு விட்டு எழுந்து சென்றான்.

ஜோடி 1 :

மெகா சீரியல் மாதிரி நீண்ட இடைவேளை விட்டதற்கு மன்னிக்கவும்.
ப்ரியா: ஹெய், pizza இன்னும் வரல. நீ உள்ள பொய் வாங்கிண்டு வாயேன்??
சீனு: sure . போய் பாக்கறேன்.

சீனு உள்ளே சென்ற நேரத்தில் ப்ரியா அவளின் நெருங்கிய தோழிகளுக்கு இது வரை நடந்தவற்றை ஒரு sms -ஆக அனுப்பினாள்.

சீனு pizza -வுடன் வந்தான். டப்பாவை ஓபன் செய்த ப்ரியா சீனுவிடம் sauce போட சொன்னாள். நம்ம ஆர்வ கோளாறோ sauce பாட்டில்-ஐ திறந்து கட கடவென்று ஒரு பக்கமாக ஊற்ற. ப்ரியா-வின் முகம் சற்று சுருங்கியது.

ப்ரியா: என் கிட்ட குடு நானே ஊத்தறேன்.
என்று கூறி அவள் அந்த பாட்டில்-ஐ வாங்கி pizza -வின் மேல் பரவலாக ஊற்றினாள்.

ஒரு சிறு துண்டை எடுத்து அவனுக்கு குடுத்தாள். இந்த முறையாவது சற்று புத்திசாலி தனமாக அவள் என்ன செய்கிறாள் என்று கவனித்து அதன் படி செய்திருக்க வேண்டும். ஆனால், நமது மக்கு சீனு அந்த pizza துண்டை வாங்கி தோசை சாப்பிடுவது போல் மடித்து உள்ளே போட முயன்று, முடியாமல், பாதி கீழே சிந்தி...
ப்ரியாவின் முகமோ, அப்பப்பா! அத்தனை விதமாக முகம் சுளிக்க முடியும் என்று அவளை இப்பொழுது பார்த்தல் தெரிந்து விடும்.

ப்ரியா: "ஒரு pizza -வை கூட ஒழுங்கா சாப்பிட தெரிலையே?? இவன் எங்க டிஸ்கோவுக்கு எல்லாம் போய் இறுக்க போறான்???" (என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.)
ப்ரியா: நீ நெஜமாவே GRE படிக்கறியா??
சீனு: ஆமாம் அதுல என்ன டவுட்??
ப்ரியா: இல்ல அங்க எல்லாம் போனா நீ இதெல்லாம் சாப்டு ஆகணும். உனக்கு இங்கயே இவ்ளோ கஷ்டமா இருக்கே நீ வெளி நாடு போய் எப்படி இருப்ப??

ஜோடி 2 :
பாதி வழியிலேயே தன் கை பேசியில் இருந்து ஸ்வர்ணா-வை அழைத்தான் ஆனந்த்.

ஆனந்த்: நான் தான் மா. நான் இங்க வந்துட்டேனா அங்க நீ எப்படி தனியா இருப்ப?? அதான் போன் பண்ணினேன்.
ஸ்வர்ணா: சரி சரி எனக்கு எதாவதுனா நானே கூப்டறேன். போன்-ஐ வை.
ஆனந்த்: சீக்ரமா வந்துடறேன். வெயிட் பண்ணு.

ஒரு நிமிடத்தில் இரண்டு மசாலா கடலை பொட்டலங்களுடன், ஸ்வர்ணா-வை நோக்கி ஆனந்த் நடந்தான்.

ஆனந்த்: இந்தா.
குடுத்து விட்டு அவசர அவசரமாக அவன் கடலை பொட்டலத்தை திறந்து, பாதியை கீழே சிந்தி, மீதியை உள்ளே திணித்தான்.

ஸ்வர்ணா: இங்க தா, இதக் கூட ஒழுங்கா பண்ண தெரியல உனக்கு. நானே எடுத்து தரேன்.

ஜோடி 1 :
திரு திரு என்று சந்தையில் காணமல் போன குழந்தையை போல் முழித்தான் சீனு.
ப்ரியா: இரு நானே எடுத்து தரேன். நான் சாப்டறத பாத்து நீயும் சாப்டு.
சீனு: ஓகே, ட்ரை பண்றேன்.
ஒரு வாராக அறையும் கோரயுமாய் pizza சாப்பிட கற்றுக்கொண்டான் சீனு.

ப்ரியா: (அவள் மனதில்) "ச இந்த pizza -வ கூட ஒழுங்கா சாப்ட தெரியல. இவனோட நாளைக்கு நான் எப்படி நாலு எடத்துக்கு போக முடியும்?? அவசர பட்டு லவ் அ சொல்லிட்டோமோ?? இப்ப கூட ஒண்ணும் கேட்டு போகல எப்டியாவது இவன கழட்டி விட்டுடனும். இவனுக்கு அந்த ரோஹித் அ தேவளாம். வெறும் டிஸ்கோ-கு மட்டும் தான் போக மாட்டேன்னு சொன்னான். ஜிம் எல்லாம் போய் ரொம்ப ஸ்மார்ட்-அ இருந்தான். அவன விட்டுட்டு இவனோடயா??"

ப்ரியா: நான் உன் கிட்ட ஒண்ணு சொல்லட்டுமா?
ஜோடி 2 :
ஆனந்த்: நான் உன் கிட்ட ஒண்ணு சொல்லட்டுமா?
ஸ்வர்ணா: என்ன சொல்லணும்?? அதுக்கு ஏன் permission எல்லாம் கேட்டுண்டு?
ஆனந்த்: நீ ஏன், உனக்கு பாத்து இருக்கற மாப்பிள்ளை கிட்ட நம்ம லவ் மேட்டர்- அ சொல்ல கூடாது??
ஸ்வர்ணா : நடக்கற காரியமா பேசு. நான் எங்க பொய் பாத்து அவன் கிட்ட எப்படி சொல்ல முடியும்?

ஆனந்த்: ஒரு நாள் எங்கயாவது வெளில கூப்புடு நானும் வரேன். ரெண்டு பெறுமா சேந்து நம்ம நெலமைய அவர் கிட்ட சொல்லலாமே?
ஸ்வர்ணா : நீயும் வரேனா அப்பா எனக்கு ok . ஆனா நாம பேசறத ஏத்துண்டு என்ன விட்டுட்டு போய்டுவானா?
ஆனந்த்: எதுவுமே பண்ணாம இருக்கறதுக்கு அட்லீஸ்ட் இத ஒரு ஆரம்பமா எடுத்துண்டு பண்ணலாமே.

ஸ்வர்ணா : ஆனா இது 100 பெர்சென்ட் சுமூகமா போகும்னு சொல்ல முடியாது. நமக்கே பாதகமா கூட முடியலாம். அந்த மாப்பிள்ளை கொஞ்சம் செல்வாக்கு உள்ள ஆளு. உனக்கு தான் தெரியுமே அதுனால தான அவன எனக்கு கட்டி வெச்சு அவன் மூலமா எங்காத்துல இருக்கற அடுத்த ரெண்டு ஜீவனுக்கும் எதாவது வழி பண்ண பாக்கறா எங்க அம்மா.
ஆனந்த்: எல்லாத்துக்கும் பயந்துண்டே இருந்தா ஒண்ணுமே பண்ண முடியாது. உன் கல்யாணத்துக்கு வந்து அக்ஷதை போட்டு ஆசிர்வாதம் வேணும்னா பண்ணலாம்.

ஸ்வர்ணா: என்ன இப்படி எல்லாம் பேசறே??
ஆனந்த்: உனக்கு கண்டிப்பா நான் வேணுமா??

ஜோடி 1 :
ப்ரியா: உனக்கு கண்டிப்பா நான் வேணுமா?
சீனு: ஹேய்! இதென்ன கேள்வி. கண்டிப்பா! அதுனால தான உன் பின்னாடி இவ்ளோ அலைஞ்சேன்.

ப்ரியா: OK . ஆனா எனக்கு நீ வேண்டாம். உனக்கும் எனக்கும் செட் ஆகும்னு தோணல.
சீனு: என்ன?? என்ன சொல்லற?? வேளையாடரியா?

ப்ரியா: இல்ல நெஜம்மா தான் சொல்லறேன். நான் கொஞ்சம் அவசரப் பட்டு முடிவு பண்ணிட்டேன்னு நினைக்கறேன். நாம ரெண்டு பேருக்கும் செட் ஆகாது.
சீனு: ஏன் ஏன் ஏன் அப்டி சொல்லற?

ப்ரியா: நான் ok சொல்லும் பொது கேள்வி கேட்டியா? இப்ப வேண்டாம்னு சொல்லும் பொது மட்டும் ஏன் கேள்வி கேக்கற?? வேண்டாம் நா விடு.
சீனு: இத ஏன் 45 minutes முன்னாடியே சொல்லல??
ப்ரியா: இதென்ன கேள்வி?

ஜோடி 2 :

ஸ்வர்ணா: இதென்ன கேள்வி?? கண்டிப்பா. உங்கள தானே நான் மனசு பூரா நெனச்சுண்டு இருக்கேன்.
ஆனந்த்: அப்ப சரி. நான் சொல்றதுல உனக்கு நம்பிக்கை இருக்குல?
ஸ்வர்ணா: ஹ்ம்ம் நம்பறேன். நம்பிக்கை இல்லாம என்ன?

ஆனந்த்: அப்ப நான் சொல்றத கேட்டு பண்ணு. எல்லாமே சரியா வரும். பிளான் A இல்லேனா பிளான் B . OK அ??
ஸ்வர்ணா: டபுள் ok . ஆனா அது என்ன பிளான் B . என் கிட்ட இது வரைக்கும் சொல்லவே இல்லையே??

ஆனந்த்: அத இனிமே தான் யோசிக்கணும்.
ஸ்வர்ணா: என்னது??
இருவரும் கல கலவென சிரித்தனர். முதல் முறையாக அவர்களின் கவலைகள் எல்லாம் கடல் அலை அழித்துச் சென்று விட்டது போல் ஒரு உணர்ச்சி.

ஜோடி 1 :

சீனுவிற்கு தான் வாங்கி வைத்திருந்த புது apache பைக்-இல் யாரோ சேற்றை வாரி இறைத்தது போன்ற உணர்ச்சி.

சீனு: என்னது? இது என்ன கேள்வியா? தமிழ் கேள்வி தான் உனக்கு அர்த்தம் நல்லாவே புரியும்.
ப்ரியா: எல்லாத்துக்கும் உனக்கு பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல. இது என் வாழ்க்கை. என் இஷ்ட்டப்படி வாழ எனக்கு முழு உரிமை இருக்கு. யாருக்கும்
பயப்படணும், யாருக்கும் பதில் சொல்லணும்னு எனக்கு அவசியம் இல்ல. உனக்கும் எனக்கும் ஒத்து வராது. காரணம் சொல்ற அளவுக்கு
ஒண்ணும் இல்ல. அப்ப ஒத்து வரும்னு தோணிச்சு இப்ப ஒத்து வராதுன்னு தோணுது. அவ்ளோ தான்.

சீனு, அவன் கண்ட கனவுக்கு வெறும் 50 நிமிடங்கள் தான் வாழ்க்கை என்று நினைக்கவில்லை. GRE கிளாஸ்-ஐ விட இவள் பின்னால் அவன் அலைந்தது தான் அதிக நிமிடங்கள் இருக்கும்.

இருவரும் எழுந்து வெளியில் வந்தனர். கண்களில் கோவமும் ஆத்திரமும் சீனுவிற்கு. அப்பாடா, தப்பிதொமடா சாமி என்ற உணர்வு ப்ரியாவிருக்கு.

ஜோடி 2 :

இருவரும் நடக்கத் தொடங்கினர்.
ஸ்வர்ணா: நீ சொல்லும் பொது இந்த ஐடியா ஒத்து வராதுன்னு தோணித்து. இப்ப ஒத்து வரும்னு தோண்றது. பாக்கலாம்.

இருவரும் தாங்கள் வண்டி நிறுத்தி இருந்த இடத்தை நோக்கி மௌனமாய் நடந்தனர்.

ஜோடி 1:

ப்ரியா: சரி அப்பறம் பாக்கலாம்.
சீனு: ஹேய், வந்தது வந்த பீச்சுக்காவது என்னோட வந்துட்டு போ. ஒரு friend ஆ?
ப்ரியா: பீச்சுக்கா?? இப்பவா? மணி என்னனு தெயர்யுமா?? எட்டு. சாரி, நான் வீட்டுக்கு போகணும். இல்லேனா அம்மா தேடுவாங்க.

சீனு: அப்ப உன்னோட இருந்த இவ்ளோ நேரமும் வேஸ்ட் ஆ??
ப்ரியா: வேற என்ன எதிர் பாக்கற?

சீனு: யாரவது உன் friend intro தந்துட்டு போ. ப்ளீஸ்.
ப்ரியா: இவ்ளோ தானா. இதக் கேக்கவா பீச்-கு கூப்ட?? இங்கயே தரேன். உன்னோட range -கு என்னோட friend சுவாதி தான் சரியா வருவா. கொஞ்சம் பழம். பாக்க சுமார இருப்பா. பரவாலயா ?

சீனு: இப்படி மொட்டையா சொன்னா எப்படி? போட்டோ ஏதாவது இருந்தா காட்டு.
ப்ரியா அவளின் மொபைல் போன்-ஐ திறந்து அதில் இருக்கும் சுவாதி-இன் படம் ஒன்றை அவனிடம் காட்டினாள்.

சீனுவோ , அயராது பாலிவுட் நடிகைகளுடன் நடித்தே தீருவேன் என்று அடம் பிடிக்கும் சில தமிழ் ஹீரோக்கள், அவர்கள் "முடியாது" என்று சொன்னவுடன் உள்ளூர் நடிகைகளே மேல் என்று சற்று ஏமாற்றமடைந்த முகமும், "இந்த பழம் புளிக்கும்" என்ற மனப் பான்மைக்கும் வருவார்களே அது போல் ஆகி விட்டான்.

சீனு: சரி அப்ப போன் பண்ணி தா.
ப்ரியா: என்னது போன் ஆ?? கண்டிப்பா முடியாது.
சீனு: ப்ளீஸ். ப்ளீஸ் ப்ளீஸ். இது கூட பண்ண மாட்டியா??
பிரியா: ok ! ok ! பண்றேன்.

என்று கூறி தன்னுடைய செல் போன்-இல் சுவாதி -யின் நம்பர்-ஐ டயல் செய்தாள்.

சுவாதி: ஹாய், ப்ரியா என்ன இப்ப போன் பண்ணி இருக்க??
ப்ரியா: ஹே சாரி யா, நான் சீனு ஓட இருந்தேனா. நம்ம friends எல்லார் போட்டோ-வும் காமிச்சேன். உன் போட்டோ-வ பாத்துட்டு உன் கூட பேசியே ஆகணும்னு ஒரே பிடிவாதம் பிடிச்சான் அதான் கால் பண்ணினேன். sorry for the disturbance .

சுவாதி:ச ச அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல.

(சுவாதி-இன் மனமோ) "தான் போட்ட பந்தில் batsman நிச்சயமாக அவுட் ஆகி விட்டான் என்ற சந்தோஷத்தில் இருக்கும் bowler -ஐ போல இருந்தது. ஆனால் umpire -கு அல்லவா தெரியும் அது நோ பால் என்று".

இருவரும் இரண்டு நிமிடங்கள் போன்-இல் பேசினார்கள். சீனு சுவாதி-இன் நம்பர்-ஐ வாங்கிக் கொண்டான்.

ப்ரியா: சரி அப்ப நான் கெளம்பறேன்.
என்று தன கையை நீட்டினாள். பத்து வினாடிகள் இருவரும் கையை குலுக்கினார்கள்.

ஜோடி 2 :
ஸ்வர்ணா: சரி அப்ப நான் கெளம்பறேன்.
ஆனந்த்: வண்டி எடுத்துண்டு வா. வாசல் வரைக்கும் நானும் வரேன்.

ஸ்வர்ணா: ஹலோ, பீச்-கு எது வாசல்??
ஆனந்த் அசடு வழிந்து ஒரு சிரிப்பை போட்டு விட்டு. பிடித்திருந்த கையை மெல்ல, விட மனசே இல்லாமல், கடைசி அணு வரை அவள் விரல்களை இவன் விரல்கள் தீண்டிய பின், கையை எடுத்தான். இருவரும் தங்கள் வண்டிகளை எடுத்துக் கொண்டு, அதை தள்ளிய வாறே லைட் ஹவுஸ் வரை வந்தனர். அங்கே மௌனமாய் நின்று, என்ன பேசுவதென்றே தெரியாமல், ஒருவரை ஒருவர் பார்த்த படி நின்று கொண்டிருந்தனர்.
ஸ்வர்ணா: அப்பறம்??

ஜோடி 1 :

ப்ரியா: அப்பறம்??
சீனு: தேங்க்ஸ், உன்னோட friend intro தந்ததுக்கு. கண்டிப்பா பீச்-கு வரலையா?
ப்ரியா: எங்க அம்மா 8 .30 குள்ள வீட்டுக்கு போகலேனா வெளக்குமாரோட வாசல்ல நிப்பா.

சீனு: ஹே, இதுக்கு ஏன் இவ்ளோ டென்ஷன் ஆற? சும்மா தான் கேட்டேன். நான் வீட்டுக்கு கெளம்பறேன். BYE . nice meeting you .
என்று கூறி விட்டு தன் வண்டியை கிளப்பி, சுவாதி-ஐ பற்றி நினைத்துக் கொண்டே வேகத்தை கூட்டினான்.

ப்ரியா-வோ ஆட்டோ எங்கே பிடிப்பது என்று தெரியாமல் தயங்கி தயங்கி, ரோட்டை கிராஸ் பண்ணலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே சற்று தூரம் நடந்தாள்.

ரோஹித்: ஹே ப்ரியா! What a surprise ? இங்க என்ன பண்ற?
திடீரென்று ரோஹித்-ஐ பார்த்த ப்ரியாவிற்கு என்ன பன்னுவதேன்றே தெரியவில்லை. ஆச்சர்யம் ஒரு பக்கம், சந்தோசம் இன்னொரு பக்கம்.

ப்ரியா: ரோஹித்.........! எவ்ளோ நாள் ஆச்சு?? எப்படி இருக்க?? நான் ஜஸ்ட் friends கூட வந்தேன்.
ரோஹித்: ரொம்ப நல்லாஇருக்கேன். நான் இப்ப தான் friends கூட ஊர் சுத்திட்டு வரேன். ரொம்ப நாள் ஆச்சுல நாம மீட் பண்ணி?

ப்ரியா: ஆமாம். உன்ன பாத்ததுல ரொம்ப சந்தோசம்.
ரோஹித்: எனக்கும் தான்.
ப்ரியா: அப்பறம்?

ரோஹித்: அப்பறம்?? என்ன?? ஹே! உனக்கு தெரியுமா நான் இப்பலாம் pub -கு போக ஆரம்பிச்சுட்டேன்.
ப்ரியா: wow ! really ?
ரோஹித்: ஆமாம். நெஜம்மா தான். உன்ன நான் ரொம்ப மிஸ் பண்றேன் ப்ரியா.
ப்ரியா : நானும் தான்.

ரோஹித்: பக்கத்துல தான பீச் இருக்கு. உனக்கு problem இல்லேனா, நாம ஏன் அங்க பொய் உக்காந்து கொஞ்ச நேரம் பேசக் கூடாது??
ப்ரியா: wow ! ராத்திரி நேரம், கூட்டம் ஜாஸ்தி இருக்காது. நல்ல இருட்டு வேற. கடல் அலை கிட்ட போய் நின்னு கூட பேசலாம். எந்த தொந்தரவும் இருக்காது.

ரோஹித்: உங்க வீட்ல ஒரு problem -உம் வராதே?
ப்ரியா: ச,ச! நான் பதினோரு மணிக்கு போனா கூட யாரும் எதுவும் கேக்க மாட்டாங்க. அவ்வளவு நம்பிக்கை என் மேல. சரி போகலாமா??

ரோஹித்: OK ! Hop in !
துள்ளி குதித்து அவன் பைக்-இன் பின்னால் சற்று நெருக்கமாகவே உக்கார்ந்தாள் ப்ரியா.

ப்ரியா: சரி, கெளம்பலாம்.
முடிப்பதற்குள் வண்டி பீச்-ஐ நோக்கி பறந்தது.

ஜோடி 2 :

ஸ்வர்ணா: சரி, கெளம்பலாம்.
ஆனந்த்: கெளம்பலாமா? அதுக்குள்ளயா?

ஸ்வர்ணா: மணி ஆகலையா?
ஆனந்த்: சரி கெளம்பலாம். உன் மாப்பிள்ளைக்கி போன் செஞ்சுட்டு எனக்கு inform பண்ணு. ஆத்துக்கு போனதும் மறக்காம மெசேஜ் அனுப்பு. பாத்து பத்ரமா போ.
த்தனையும் கூறி, அவன் அவனுடைய பைக்-இல் ஏறி அமர்ந்தான். இருவரும் அவர்களின் வண்டியை ஸ்டார்ட் செய்து விட்டனர்.

ஒன்றாக " bye " என்று சற்று உரத்த குரலில் கூறி, ஆனந்த் திருவெல்லிக்கேணி-ஐ நோக்கியும், ஸ்வர்ணா சாந்தோம்-ஐ நோக்கியும் வண்டியை விட்டனர். அவர்களின் வண்டி பிரிந்து சென்ற இடைவெளியில் ரோஹித் தனது வண்டியை நுழைத்தான்.

இவ்வாறாக இந்த இரண்டு ஜோடி-களும் ஒரு மணி நேரத்தில் எப்படி போனார்கள் என்பதை நாம் பார்த்தோம். இனி...

ஆறு மாதத்திற்கு பின்பு.
ஸ்வர்ணாவும் ஆனந்தும் தங்கள் திருமண வேலையில் மும்மரமாக இருந்தனர். ஸ்வர்ணாவிர்க்கு பார்த்த மாப்பிள்ளை அவர்களின் நிலையை புரிந்து கொண்டு, ஸ்வர்ணா வீட்டில் அவனே பேசி, அவள் தாயாரையும் வழிக்கு கொண்டு வந்து விட்டான்.

ஆனந்த்-ஒ ஸ்வர்ணா -வின் தங்கைகள் இருவரையும் ஒரு நிலைக்கு கொண்டு வருவதாக வாக்கு குடுத்தான். இப்பொழுது அவர்கள் இருவருமாக சேர்ந்து அவர்கள் வாழ்க்கை என்னும் கட்டடத்தில் ஒவ்வொரு கல்லாக வைத்துக் கொண்டு வருகிறார்கள். கூடிய சீக்கிரம் புது மனை புகு விழா ஆகி விடும்.

நமது சீன் சீனு-ஒ சுவாதி-யுடன் ஒரு வழியாக செட்டில் ஆகி விட்டான். அமெரிக்கா போவதற்கும் ஒரு வாராக எல்லா ஏற்பாட்டையும் செய்து விட்டான்.

இறுதியாக ப்ரியா, ரோஹித்-உடன் மீண்டும் விரிசல் விழுந்து இப்பொழுது டாப் அப் செய்ய ஆள் தேடிக் கொண்டு இருக்கிறாள். missed call குடுப்பதாக இருந்தாலும் யோசித்தே செய்கிறாள். அவளுக்கு கிடைத்த அனுபவங்களின் மூலம் இப்பொழுது அவள் boy friends -காண சட்ட திட்டங்களை சற்று கடுமையாகவே வகுத்திருக்கிறாள். ஆகவே எளிதில் யாரும் சிக்குவதில்லை.

இவ்வாறாக இந்தக் கதை நிறைவு பெறுகிறது. மீண்டும் அடுத்த பதிப்பில் சந்திப்போம். :)















Sunday, April 18, 2010

கோடி கண்கள்

(இந்த கதை என் நண்பர் LK அவர்கள் நடத்தும் இணையதள பத்திரிக்கையில் நான் எழுதியது. இதை எப்பொழுதோ என் ப்ளாக்-இல் போட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நான் கொஞ்சம் சோம்பேறி! :P. பத்திரிக்கையை படிக்க http://vezham.co.cc/ )

நமக்கு இருப்பது இரண்டே கண்கள் தானே! எங்கே இருந்து கோடி கண்கள் வந்தது என்று யோசித்துக் கொண்டே இந்தக் கதையை படித்தால் உங்களுக்கே புரியும் தலைப்பின் அர்த்தம்.

அவள் ஒரு அல் பசினோ-வின் விசிறி. "God Father " படம் பார்த்ததில் இருந்து அல் பசினோ-வின் தீவிர ரசிகை ஆகி விட்டாள். (என்ன டா அவள் என்று கூறி God Father என்றும் கூறுகிறேன் என்று யோசிக்க வேண்டாம், சற்று வித்யாசமான பெண் தான்).தன் சினிமா (நல்ல சினிமா) பைத்திய நண்பனை பிடுங்கி எந்த எந்த அல் பசினோ படம் நன்றாக இருக்கும் என்று தெரிந்து கொண்டாள்.

ஒரு சில படங்கள் பார்த்த பின்பு அன்று அவள், "The Scent of women " பார்க்க தீர்மானித்தாள். படத்தில் பசினோ பார்வையற்ற, ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரி என்பது ஏற்கனவே விமர்சனத்தின் மூலம் அறிந்து கொண்டிருந்தாள். படம் ஆரம்பித்தது. எல்லா ராணுவ அதிகாரியையும் போல் இவரும் கோவக்கரராகவும், கண்டிப்பனவராகவும் இருந்தார். இதில் ஒரு வித்யாசமும் இல்லை.

படம் நகர நகர அந்த கதாப்பாத்திரத்தின் தனி குணாதிசியம் வெளி வந்தது. அவர் வாசனையை வைத்தே பெண்கள் உபயோகப் படுத்தும் சோப்பு, ஷாம்பூ, பெர்புமே போன்றவற்றை சரியாக யூகித்து விடுவார். அது மட்டும் அல்ல அவரை கடந்து செல்லும் பெண்ணின் உடல் அமைப்பையும் சரியாகக் கூறி விடுவார். இதை அருவெறுப்பு இல்லாமல் நமக்கு பிடிக்கும் வண்ணத்தில் படத்தில் காமித்து இருப்பார் இயக்குனர். சபாஷ் போடும் படியான காட்சிகள் வரத் தொடங்கின.

இரவு ஒரு மணி வீட்டில் எல்லாரும் தூங்கிக் கொண்டு இருப்பார்கள் என்று தெரிந்தும், தன்னை மறந்து அவள் கைகள் ஒன்றை ஒன்று வேகமாக ஓசை வரும் படி கட்டித் தழுவிக் கொண்டன. (கை தட்டினாள் என்று தான் கூற வந்தேன் :P ). சில இடங்களில் ஆனந்தக் கண்ணீர் அவள் முகத்தைக் கழுவின (தூங்காமல் இருக்க இது போன்ற அவசர வழி என்னிடம் நிறைய உண்டு :P ) . குறிப்பாக அந்த இளைஞனுடன் நடிக்கும் காட்சிகளை மெய்ம் மறந்து பார்த்தாள்.

அட இதெல்லாம் என்ன? பார்வையற்ற பசினோ அந்தப் படத்தில் கார் ஓட்டுவார்! ஆமாம் இது அவளை வியப்பின் எல்லைக்கே கொண்டு சென்றது. நடிப்பு என்றாலும் அது மிகவும் கடினமான காரியம் தான். பக்கத்தில் இருப்பவர் வழி சொல்ல அவர் பந்தய கார் ஒன்றை ஓட்டிப் பார்ப்பார். இது தான் படத்தின் உச்சக் கட்ட காட்சி. மிக அற்புதமாக இயக்குனர் இதை இயக்கி இருப்பார்.

இந்தக் காட்சி அவள் மனதில் பல கேள்விகளை எழுப்பியது. "கண் தெரியாமல் கார் ஓட்ட முடியுமா?? எப்படி முடியும்??" நமக்கு கண் தான் இல்லையே தவிர மற்ற புலன்களை வைத்து நம்மால் கண் இருப்பவர் போல சாதரணமாக வாழ்க்கை நடத்த முடியும் என்பதை அவளும் பல முறை கேட்டு இருக்கிறாள் . பல முறை பேருந்திலும் பாத்து இருக்கிறாள். ஆனால் இன்று அந்தப் படத்தின் மூலம் நேரடியாக அனுபவித்தாள். தானே கண் இல்லாமல் ஏதோ சாதனை செய்தது போல் அவளுக்கு அத்தனை ஆனந்தம். நிம்மதியான மற்றும் ஆனந்தமான மனதுடன் அன்று தூங்கினாள்.

மூன்று நான்கு நாட்களுக்கு பிறகு, அவளுடைய ப்ராஜெக்ட் ஆபீஸ்-இல் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். மதிய நேரம், கொளுத்தும் வெயில், சுருண்டு விழாத நிலையில், பாதி மனது சாப்பாட்டில் பாதி மனது அவளுடைய ப்ராஜெக்ட்-இல் . இரண்டிற்கும் நல்ல போட்டி இறுதியில் பசியே வென்றது. மதிய உணவிற்கு நேரம் கடந்து விட்டது. சீக்கிரம் சாப்பிடலாம் என்று நடையை விருட்டென விட்டாள்.

எப்பொழுதும் மதிய நேரம் கூட்டமாக இல்லாத கபாலீஸ்வரர் கோவில் அருகே அன்று நல்ல கூட்டம். என்ன இன்று திடீரென்று இவ்வளவு கூட்டம் என்று யோசித்துக் கொண்டே வந்தாள். எதிரே ஒரு கண் இல்லாதவர் அந்த டிராபிக்-இல் தத்தளித்துக் கொண்டு இருந்தார். அவர் யாரிடமோ ஏதோ கேட்பது போல் தோணிற்று. ஆனால் நம் மக்களுக்கு இது மாதிரி விஷயத்தில் ஆயிரம் காது இருந்தாலும் 'கேட்'காது. அவள் முதலில் அவருக்கு "என்ன வேண்டும்" என்று மட்டும் கேட்டு உதவ நினைத்தாள். பின்பு "இல்லை, இல்லை அவர் அருகில் எங்காவது போக வேண்டும் என்றால் அவரை அங்கே அழைத்து சென்று விட்டு விடலாம்" என்ற முடிவிற்கு வந்தாள். பசி வேறு அவள் உயிரை வாங்கியது. "வயிறே சற்று அமைதியாக இரு ஒரு சின்ன வேலை மனசாட்சிக்கு திருப்தி தரும் வேலை அதை முடித்ததும் நேராக சென்று உன்னை திருப்தி படுத்துகிறேன்" என்று அவள் வயிறிடம் கூறினாள்.

இதை எல்லாம் நினைத்துக் கொண்டே அந்த பார்வையற்றவரிடம் அவள் சென்று விட்டாள். அவர் யாரோ அருகில் வருவதை உணர்ந்து "இது கபாலி கோவில் அருகில் தானே?" என்று கேட்டார். அவளும் " ஆமாம்" என்றாள். "நீங்க எங்க போகணும்". அவருக்கு அது சரியாக காதில் விழவில்லை போலும், ஆனாலும் அவர் "கிரி ட்ரேடிங் " என்றார். அவள் அதை உறுதிப் படுத்துவதற்காக மீண்டும் அவர் அங்கு தான் செல்ல வேண்டுமா என்று வினவினாள். அதற்க்கு அவர் "இல்லை நான் கிரி ட்ரேடிங் வந்தேன், இப்பொழுது M 1 5 பிடிக்க வேண்டும். நான் மேடவாக்கம் போக வேண்டும் "என்றார்.

உடனே "மேடவாக்கத்தில் இருந்து இவர் இங்கு தனியாக என்ன பண்ணுகிறார்??" என்று அவள் யோசித்தாள். "வாங்க நானே உங்கள பஸ் ஸ்டாப்- விட்டுடறேன்" என்று அவர் கையை பிடித்து அழைத்துச் சென்றாள். ஒரு கையில் குச்சியும் ஒரு கையில் அவள் கையையும் பிடித்துக் கொண்ட அவர் மிக வேகமாக நடக்கத் துவங்கினார். பசியில் சுருண்டு இருந்த அவளும் ஓரளவுக்கு வேகத்தைக் கூட்டினாள்.

"பேச்சுக் குடுக்காமல் வந்தால் ஏதோ மாதிரி இருக்கும் ஆதலால் எதாவது பேசலாம். நாம் எதாவது கேள்வி கேட்டால் அவர் பதில் சரியாக கூறவில்லை என்றால்??" இப்படி அவள் யோசித்து முடிப்பதற்குள் அவரே "நீ என்ன மா பண்ற படிக்கறிய வேலை பாக்கறியா ??"னு வினவினார். "நான் MSc IT இறுதி ஆண்டு படிக்கறேன்" என்றாள். "ஓஓஹோ எந்த கல்லூரி- படிக்கற?". அவள் கல்லூரி பெயரும் அது எங்கே இருக்கிறது என்றும் அவள் கூறினாள். "இன்னிக்கி காலேஜ் இல்லையா மா?" என்றார். அவளோ"இல்லை இப்ப நாங்க ப்ராஜெக்ட் பண்ணனும் அதுக்காக எதாவது ஒரு கம்பெனி- பொய் ஆறு மாசம் வேல பாக்கணும்". அவள் முடிப்பதற்குள் "அப்பா இன்னிக்கி லீவ் ?" என்னவோ அவளை ரொம்ப நாள் தெரிந்தார் போல். அவர் கேட்டதில் அவளுக்கு எந்த எரிச்சலும் வரவில்லை. "இல்லை எங்களுக்கு பாதி நாள் தான் வேலை அப்புறம் வீட்டுக்கு வந்துடலாம்"என்றாள்.

அவளுக்கோ "இவர் கிரி ட்ரேடிங் -இல் என்ன வாங்க வந்திருப்பார்?? அங்கு புத்தகங்கள் தானே கிடைக்கும் ஆனால் இவரால் படிக்க முடியாதே?? " என்றெல்லாம் சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது. ஓடி ஓடி களைத்து விட்டது அவள் சிந்தனைக் குதிரை. அவளுக்கு வேலை வைக்காமல் அவரே "நான் கிரி ட்ரேடிங் வந்தேன். ஒலிநாடா வாங்க" என்றார். "அடடா அங்கு ஒலிநாடாவும் கிடைக்கும் என்பது அவளுக்கு சற்று கூட நினைவே இல்லை. ஆனால் இந்த ஒலிநாடா வாங்கவா இவ்வளவு தூரம் அதுவும் பார்வை இல்லாமல் இவர் மதிய நேரத்தில் வந்திருக்கிறார்?? இந்த ஒலிநாடா அங்கே கிடைக்காதா என்ன??".

சும்மா இருக்க முடியுமா?? அதை கேட்டும் விட்டாள் "ஏன் நீங்க அங்கேயே எங்கயாவது இந்த ஒலிநாடா வாங்கி இருக்கலாமே?? இவ்வளவு தூரம் தனியாக வரதுக்கு கஷ்டமா இல்லையா??". அவரோ " இங்க வாங்கினா தான் தரம் நல்லா இருக்கு. கஷ்டத்த பாத்தா முடியுமா?" என்று போட்டாரே ஒரு போடு. அவள் வியப்பில் ஆழ்ந்தாள். ஒரு வினாடி பசினோ கார் ஓட்டிய காட்சி அவள் கண் முன் மின்னலைப் போல் மீண்டும் தோணிற்று. ஏதோ ஒரு புது வித உணர்ச்சி. முதல் முதலில் நடக்கத் துவங்கிய குழந்தையை பார்த்த தாய் போல் ஆனது அவள் உள்ளம். ஆனால் அவள் உணர்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. பார்வை தான் இல்லையே தவிர மற்ற எல்லாப் புலன்களும் சேர்ந்து "கோடிக் கண்களை" இவர்களைப் போன்றவர்கள் வைத்திருக்கிறார்கள், என்று அந்தக் கணமே அவள் முழுமையாக புரிந்து கொண்டாள்.

மேலும் அவர் போஸ்ட் கவர்-கள் விற்பதாக கூறினார். அவரை அவருக்குரிய பேருந்தில் ஏற்றி விட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பும் பொது அவளுக்கு இதுவரை நிழ்கந்தவற்றை அசை போட்டுப் பார்த்தாள். அதில் அவள் வயிறின் பசி நீங்கி அறிவுப் பசியும் நீங்கியது. நம் இரண்டு கண்களைத் தவிர்த்து ஒவ்வொரு நுண் உயிரும் நமக்கு ஒரு கண் போல தான் என்று அவள் புரிந்து கொண்டாள். ஆனால் நாம்??