Monday, November 29, 2010

சிட்டி சென்டர் அனுபவம்!

சமீபத்தில் சென்னை R . K . சாலையில் உள்ள சிட்டி சென்டர்-இல் ஷாப்பிங் செய்பவர்களுக்கு கூப்பன் ஒன்று அளிக்கப் பட்டது. ஒவ்வொரு 500 ரூபாய்க்கும் ஒரு கூப்பன் என்று குடுத்தார்கள். நாங்களும் ஒரு துணிக்கடையில் சென்று துணி வாங்கி இருந்தோம். எங்களுக்கும் கூப்பன்கள் அளிக்கப் பட்டது. அதை நிறைவு செய்து நுழை வாயிலின் உள்ளே வைக்கப் பட்டு இருந்த போட்டியில் போடுமாறு சொன்னார்கள். அவ்வாறே செய்தோம்.

சனிக் கிழமை இரவு எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. எங்கள் மாமா பெயரில் நாங்கள் பூர்த்தி செய்த கூப்பனுக்கு பரிசு விழுந்திருந்தது. ஏதோ கிபிட் வௌசேர் என்றார்கள். மற்ற விவரங்கள் எதுவும் கூறவில்லை நாங்களும் கேட்டுக் கொள்ளவில்லை. ஞாயிற்றுக் கிழமை அவர்களின் எண்ணில் எங்கள் மாமாவை அழைக்க சொன்னோம் அப்பொழுது அந்தப் பெண்ணிற்கு விவரம் எதுவும் தெரியாததால் பாசித் என்பவற்றின் எண்ணைக் கொடுத்து அதில் அழைக்க சொல்லி இருந்தார்கள்.

அவர் மிகவும் தன்மையாக பேசினார். அவராலும் விவரம் எதுவும் தர இயலவில்லை. ஞ்யாயிற்றுக் கிழமை அதாவது நேற்று எங்களால் போக முடியாததால் நாங்கள் அவரிடம் திங்கட் கிழமை (அதாவது இன்று) வந்து வாங்கிக் கொள்ள முடியுமா என்று கேட்டோம். அதற்க்கு அவர் நீங்கள் சிட்டி சென்டர் ஆபீஸ்-இல் சென்று பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

நாங்களும் (நானும் என் தம்பியும்) ஊருக்கு செல்லும் பாக்கிங் வேலைகளுக்கு நடுவில் ஒரு அரை மணி நேரம் ஒதுக்கி அங்கே சென்றோம். ஹெல்ப் டெஸ்க்-இல் விசாரித்து சிட்டி சென்டர் அலுவலகத்தையும் அடைந்தோம். வெளியே செக்யூரிட்டியிடம் விவரத்தை சொன்னோம். அவர் "பிரதீப் குமார்" என்பவரை பார்க்குமாறு கூறினார். வேண்டிய தகவல்களை ஒரு நோட்-இல் பதிவு செய்து கை எழுத்தும் இட்டு விட்டு நானும் என் தம்பியும் உள்ளே சென்றோம். நாங்கள் உள்ளே நுழைந்த நேரம் சரியாக 3 .55 P .M .

அங்கே உள்ளே வரவேர்ப்பாளர் என்று நினைக்கிறேன் ஒரு பெண் இருந்தார். அவரிடம் நாங்கள் பிரதீப் குமார்-ஐ பார்க்க வந்திருப்பதாகவும் எதற்காக வந்திருக்கிறோம் என்றும் தெரிவித்தோம். அந்தப் பெண் அவர் இல்லை நீங்கள் நாளை வந்து தான் அந்த பரிசைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றார். நான் உடனே இந்த பரிசிற்காக எத்தனை முறை நாங்கள் வர முடியும்? வேறு யாரையாவது அணுகி எங்கள் வேலையே முடித்து தாருங்கள் என்றேன். இன்னொரு அறையில் இருக்கும் நபரை பார்க்கும் படி கூறினாள் அந்த பெண். ஆனால் அங்கும் யாரும் இல்லை.

உடனே அவள் மீண்டும் நாளை தான் வர வேண்டும் என்றாள். எனக்கு பயங்கர கடுப்பாகி விட்டது. ஒரு ஆபீஸ்-இல் யார் இருக்கிறார்கள் யார் இல்லை என்று கூடவா தெரியாது?? சாயங்காலம் நான்கு மணிக்கே எல்லாரும் பொய் விட்டால் பின்பு ஆபீசை மட்டும் எதற்கு திறந்து வேயத்திருக்க வேண்டும்?? நானோ என்னால் மீண்டும் வர முடியாது வேலை இருக்கிறது இன்று வர சொல்லி பாசித் தான் கூறினார் என்று சொன்னேன். உடனே அவள் அங்கு இருந்த சிலரிடம் நீங்களே பேசுங்கள் என்றாள். (அந்தப் பெண்ணிற்கு சம்பளம் தண்டம் தான் போலும் பாவம்!).

சரி என்று அங்கு இரண்டு மூன்று பேர் அமர்ந்திருந்த அறையின் நுழை வாசலில் சென்று நான் எதற்கு வந்திருக்கிறேன் என்று கூறினேன். அவர்களும் அதே பதிலைக் கூற எனக்கு கடுப்பு அதிகம் ஆகி விட்டது. ஒரு பெரிய சிட்டி சென்டர்-இல் பொறுப்பாக பதில் கூற யாருமே இல்லையா?? பிறகு நான் மீண்டும் வலியுறுத்தியதும் யாருக்கோ போன் பண்ணி கேட்டார்கள். கேட்ட பின் "உங்களை யார் இங்கு வர சொன்னார்கள்?" என்று அதில் ஒருவர் கேட்டார். நானோ "உங்க பாட்டி" என்று சொல்லி இருப்பேன் ஆனால் அதை சொல்லாமல் "Mr . பாசித்" என்றேன். உடனே அவரோ "அப்படி ஆனால் நீங்கள் அவரை தான் அணுக வேண்டும். அழைப்பு எண் தருகிறோம் நீங்களே அழைத்து பேசுங்கள்." என்றார்.

நானோ "நான் ஏன் அழைக்க வேண்டும்? நீங்கள் தானே இந்த அலுவலகத்தில் இருப்பவர்கள் நீங்களே அவரை அழைத்து பேசுங்கள் என்றேன்." அதில் ஒரு அறிவுக் கொழுந்து கூறியது இது தான் " நாங்கள் இந்த ஆபீஸ்-இல் தான் வேலை பார்க்கிறோம் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றார். பாவம் திறந்த வீட்டில் நாய் நுழைந்தது போல் யார் வேண்டுமானாலும் சிட்டி சென்டர் அலுவலகத்தில் நுழைந்து விடலாம் போல இருக்கிறது.

நான் ஒன்றும் கூறாமல் இருந்தேன். அவர் " நாங்க உங்களுக்கு ஹெல்ப் தான் மேடம் பண்றோம்" என்றார். வந்ததே எனக்கு கோவம் "நீங்கள் என்ன சும்மாவா தருகிறீர்கள்? நாங்கள் வாங்கின பொருளுக்கு குடுத்த கூப்பனுக்கு விழுந்த பரிசைத் தானே தருகிறீர்கள்" என்றேன்.

உடனே அவர் "நாங்கள் டெக்னிகல் பீபள்" என்றார். நானோ "நீங்கள் என்ன வேண்டுமானாலும் கூறலாம். யார் வந்து நீங்கள் டெக்னிகல் பீபள்ஆ என்று பார்க்க முடியும்? ஆகவே நீங்கள் டெக்னிகல் பீபள் என்றும் கூறலாம் ஆபீஸ் பாய் என்றும் கூறலாம். போன் நம்பரை தாருங்கள் நானே அழைத்து பேசுகிறேன்" என்றேன். அவரோ நான் கூறியதைக் கேட்டு போன் நம்பர் தராமல் பேசாமல் இருந்தார். நான் மீண்டும் மீண்டும் கேட்டும் குடுக்காமல் இருக்கவே என் குரலை உயர்த்தியதும் வேறு ஒருவர் தந்தார்.

பாசித் அவர்களுக்கு போன் செய்து பேசிய பின்பு அவர் என்னை சற்று நேரம் காத்திருக்கும் படி கூறினார். அதை அங்கே இருந்தவர்களிடம் கூறி, உக்கார நாற்காலி குடுங்கள் என்று நான் கேட்ட பின் வெளியே செக்யூரிட்டி-இடம் பொய் உக்காருங்கள் என நாயை விட கேவலமாக நடத்தினார்கள். அங்கே சென்று செக்யூரிட்டி இடம் நடந்தவற்றை கூறினேன். அவர்களால் என்ன செய்ய முடியும்?? அவர்களுக்கு தெரிந்த மரியாதை கூட பன் மடங்கு சம்பளம் வாங்கும் இவருக்கு தெரியவில்லை.

இரண்டு நிமிடத்தில் ஒருவர் வந்து கடனுக்கு 250 ரூபாய் மதிப்புள்ள "லைப் ஸ்டைல்" கூபனை குடுத்தார். யார் பெயருக்கு பரிசு விழுந்திருக்கிறது. உங்கள் கூப்பன் எங்கே? எதுவும் கேட்க்கவில்லை. என்னை அங்கே இருந்து துரத்தினால் போதும் என்று நினைத்தார்கள் போலும். வந்தவர் ஒரு போர்மலிட்டிகாக என் பெயரை கேட்டார். நானும் கூறி விட்டு நன்றியும் கூறினேன். அவர் சற்றும் எதிர் பார்க்கவில்லை நான் நன்றி கூறுவேன் என்று.

டெக்னிகல் பீபள் என்றாலும் அந்த அலுவலகத்தில் தானே வேலை செய்கிறார்?? அவருக்கும் அந்த அலுவலகத்துக்கும் சம்மந்தமே இல்லாதது போல் பின்பு எதற்காக இந்த பேச்சு?? போனவர்களை ஒழுங்காக வரவேற்கவும் இல்லை சரியான அணுகு முறையும் இல்லை. உக்கார ஒரு நாற்காலி கூட இல்லை. உக்கருங்கள் என்று சொல்ல நாதியும் இல்லை. டெக்னிகல் பீப்லாக இருந்தால் என்ன ரெண்டு கொம்பா முளைத்து விட்டது?? இதுவே நான் ஒரு அட்வேர்டைசெமென்ட் கொடுப்பதற்காக சென்று இருந்தால் அங்கு கிடைத்திருக்கும் மரியாதையே வேறு.

என்னவோ அவர் சட்டைப் பயில் இருந்து எடுத்து குடுப்பது போலவும் நான் அங்கே பிச்சை வாங்க வந்தவள் போலவும் நடத்தினர். அது மட்டுமா எனக்கு உதவி செய்கிறாராம். பாவம் என்ன நான் இவரிடம் பணத்திற்காகவா போய் நின்றேன்??? எனக்கு விழுந்த பரிசை எனக்கு குடுப்பதற்கு இவ்வளவு ஆர்பாட்டம். சிட்டி சென்டர்-இல் வேலை செய்யும் யாரேனும் இதைப் படிக்க நேரிட்டால் உங்களுக்கு நான் கூற நினைப்பது இது ஒன்று தான் "வேலைக்கு ஆள் எடுக்கும் பொது அவருக்கு பண்பும் தெரிந்திருக்கிறதா என்று பாருங்கள். ஏனென்றால் , எங்களைப் போன்ற மக்கள் இல்லை என்றால் சிட்டி சென்டர் போன்ற மால்-கள் இல்லை. அப்படிப் பட்ட மால்-கள் இல்லை என்றால் இவரைப் போன்ற ஆசாமிக்கு வேலையும் இல்லை."

இவரைப் போன்ற ஆட்களுக்கு அவர்கள் பண்ணும் தவறு தெரிய வேண்டும் என்பதே இந்தப் பதிவின் நோக்கம். அடுத்த பதிவில் சிந்திப்போம். ஹரிணி ஸ்ரீ.

Monday, November 15, 2010

அம்மாவைக் காணோம்! - 2

அம்மாவைக் காணோம்! - 1 (இங்கே)


கல்யாணி வாசல் பக்கமே வரலை என்று அங்கே இருந்தவர்கள் கூற பதட்டத்துடன் வந்து "அம்மாவைக் காணம்!" என்றான் கந்தன்.

"என்னது கல்யாணியைக் காணமா??" எனப் பதட்டத்துடன் மாணிக்கம் கூற. உடனே அவன் கையைப் பிடித்து உணர்ச்சிவசப் படாதே என்பது போல் சமிக்யை செய்தாள் அத்தை அபிராமி.

அய்யரின் காதில் மெல்ல "மணப் பெண்ணின் அம்மாவைக் காணோம்" என்றாள் அபிராமி. "என்னது பொண்ணோட அம்மாவைக் காணமா??! " என்று ஒரு அதிர்ச்சியுடன் வாயை பிளந்தார் அய்யர்.

" பதட்ட படாதீங்க. இங்கே தான் எங்கயாவது இருப்பாங்க எங்களுக்கு ஒரு பத்து நிமிஷம் தாங்க, தேடி பாக்கறோம். அது வரைக்கும் சமாளிக்க ஏதாவது பூஜை பண்ணிட்டு இருங்க" என்று கூறியவள், அவள் கணவனையும், நித்யாவின் சித்தப்பாவையும் மணவரை அருகே நிற்க வைத்து விட்டு, பதட்டம் இல்லாமல் இருக்கும் படி கூறினாள். மேலும் இரண்டு இரண்டு பேராக கீழே இறங்கி மணமகள் அறைக்கு வருமாறு கூறி விட்டு நித்யாவின் சித்தியுடன் கீழே சிரித்த வாறு இறங்கினாள்.

கீழே இறங்கி மணமகள் அறைக்கு போவதற்குள் "உங்க வீட்டுல நடக்கற முதல் கல்யாணம் எல்லாரும் ரொம்ப ஆரவாரமா இருக்கீங்க போல??" "இப்படி எல்லாரையும் சந்தோஷமா பாக்கறதே எங்க எல்லாருக்கும் நிம்மதியா இருக்கு" "ஊருக்கு உதாரணமாய் ஒற்றுமையாய் வாழும் குடும்பம்" என்றெல்லாம் போகிற வழியில், வழி மறித்து பேச்சுக் குடுக்க ஆரம்பித்தனர்.

அதில் ஒருவர் "எங்க கல்யாணிய காணம்?? இப்பவாவது வந்து மாணவரில நிக்க கூடாதா??" என்றார் என்ன சொல்வதென்று அறியாமல் முகத்தில் புன்னகையுடன் "சமையல் காரங்க ஏதோ கேட்டாங்கனு எடுத்துக் குடுக்க பொய் இருக்கா நாங்க பொய் கூட்டிட்டு வரோம்" என்று இருவரும் மழுப்பினார். இதே தொல்லை கந்தனுக்கும், அவனுடைய மற்ற உறவினர்களுக்கும் இருந்தது.

மற்றவர்கள் வருவதற்குள் நடந்தவற்றை மீண்டும் ஒரு முறை ஓட்டிப் பார்த்தாள் அபிராமி. எல்லாரும் வந்தாகி விட்டது. கந்தனையும் அவன் நண்பன் ராமு மற்றும் அபிராமியின் மகன் மூன்று பேரையும் கீழே ஒரு முறை தேடிப் பார்க்க சொன்னாள்.

நான்கு பேரை முதல் மாடிக்கும், மூன்று பேரை மொட்டை மாடிக்கும் அனுப்பினாள்.

மணமகள் அறையிலேயே காத்து இருப்பதாகவும். எல்லாரும் சரியாக ஐந்து நிமிடத்தில் இங்கு வர வேண்டும் என்றும் கூறினாள். மறக்காமல் கல்யாணியின் கைப் பேசியில் அழைத்துப் பார் எனக் கந்தனிடம் கூறினாள்.

எல்லாரும் வில்லில் இருந்து பாய்ந்த அம்பு போல் வேகமாகவும் அதே சமயம் பதட்டம் இல்லாமலும் சென்றனர். முதல் மாடியில் மொத்தம் பத்து அரை உண்டு, அதில் ஒவ்வொரு அறையாக போய் தேடிப் பார்க்க வேண்டும். சாதாரண காரியம் இல்லை. சில அறையில் ஆட்கள் இருந்தனர். சில அரை பூட்டி இருந்தது. தட்டு தடுமாறி முன்னேற வேண்டி இருந்தது.

மொட்டை மாடியில் பெரியதாக ஒன்றும் இல்லை. கீழே மணமகன் அறைக்கு போய் பார்ப்பது தான் மிகவும் கடினமான வேலை.

கந்தன் " ராமு நீ dining hall -ல போய் பாரு, நான் store room போறேன், நீ மணமகன் அறைக்கு போய் பாரு கண்ணா" என்றான்.

கண்ணன் அத்தை அபிராமியின் மகன். கண்ணன் "என்ன மணமகன் அறைக்கா?? அங்கே ஏன் வந்த எதற்கு வந்தனு கேட்டா என்ன சொல்றது??" "சும்மா சொந்தக் காரங்க எல்லாரையும் கூட்டிட்டு போலாம்னு வந்ததா சொல்லி பேச்சு வாக்குல எங்க அம்மா அங்க வந்தாங்களான்னு கேளு. பேசறதுக்கு இது நேரம் இல்லை. நான் எங்க அம்மாவோட செல் போன்-கு பண்ணி பாக்கறேன்" என்று கூறியவன் தன கை பேசியில் இருந்து கல்யாணியை அழைத்துக் கொண்டே முன்னேறினான்.

கல்யாணியின் கைப் பேசி அடித்தது. யாரும் எடுக்கவில்லை. store room பூட்டி இருந்தது. திறந்து அங்கே எங்காவது இருக்கிறாளா என்று பார்த்தான். இல்லாததால் மீண்டும் சமையல் காரர்களிடம் பேசலாம் என்று சென்றான்.

ராமு ஓடி வந்தான் "கந்தா, இது உங்க அம்மாவோட செல் தானே??" அதை வாங்கிப் பார்த்த கந்தன் ஆமாம் என்றான். "இது dining hall போற வழீல கெடந்துது அதுவும் யாரோ தூக்கி எரிஞ்சாபுல இருந்துது. பின் பக்கம் தனியாவும் முன் பக்கம் தனியாவும் இருந்துது" என்றான் பதட்டத்துடன். அய்யய்யோ அப்ப அம்மாவுக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று பதட்டத்துடன், கண்களில் நீர் வழிய மணமகள் அறையை நோக்கி ஓடினான் கந்தன்.

"அத்தை! அத்தை!! இதோ அம்மாவோட செல் போன். இது கை அலம்பர இடத்துக் கிட்ட சிதறிக் கேடந்ததா ராமு கொண்டு வந்து குடுத்தான்". மணமகள் அறையை நோக்கி ஓடுவதைக் கண்ட அபிராமியின் கணவரும் அங்கு வந்து சேர்ந்தார்.

"அப்படீனா உன் அம்மாவை யாரோ கடத்திட்டாங்களா??" என்றார் மாணிக்கம். "என்னது கடத்தலா? நமக்கு எதிரி என்று யாருமே இல்லையே?? யார் இந்த வேலைய செஞ்சு இருப்பா?" இந்த சமயம் பார்த்து உள்ளே வந்த மாலா ," என்னது கடத்தலா? யார கடத்திடாங்க??" என்றாள்.

இஞ்சி தின்ன குரங்கு போல் எல்லாரும் விழிக்க, நடந்தவற்றை சொன்னாள் அபிராமி. விஷயம் கேட்டு இடி விழுந்தது போல் ஆனாள் மாலா. "எனக்குன்னு இருந்தது ஒரே ஒரு சம்மந்தி அவங்கள யாரு கடத்தி இருக்க போறா??" என்றதும் இந்த நேரத்துலயும் அன்யோன்யதக் காட்டணுமா என்று எல்லாரும் நினைத்துக் கொண்டனர்.

"யாராவது சின்ன குழந்தைங்க கிட்ட வெளயாட குடுத்து இருப்பா. அவங்க தூக்கி வீசி இருக்கலாம். எதையும் கற்பனை செய்யாம மத்தவங்க வர வரைக்கும் அமைதியா இருங்க."

"எப்படி அமைதியா இருக்கறது??? எனக்கு தலையே சுத்தரா போல இருக்கு" என்றார் மாலா.

தேடிச் சென்ற மற்ற அனைவரும் வந்து சேர கல்யாணி அந்த மண்டபத்தில் இல்லை என்ற முடிவுக்கு வந்தனர். மாலாவும் அவள் கணவனிடம் சொல்லி
எல்லா அறையையும் திறந்து மீண்டும் தேடிப் பார்க்கும் படி சொன்னாள்.

கந்தனோ "நான் மீண்டும் சமையல் காரர்களிடம் என்ன நடந்தது என்று கேட்டு விட்டு வருகிறேன்" என்று சொன்னான்.

கண்ணீரை துடைத்துக் கொண்டு வேகமாய் வேட்டியை பிடித்த படி ஓடினான்.

சமயலறையில்..

"அம்மா இங்க வந்தாங்களா??" "இல்லையே தம்பி. இப்ப தானே வந்து கேட்டுட்டு போன. அப்பவே வந்துட்டு போய்டாங்க பா". "அம்மாவைக் காணோம்! நீங்க எப்ப கடைசீயா பாதீங்கனு சொன்னா எனக்கு உதவியா இருக்கும்".

"என்னது அம்மாவைக் காணமா?? அப்ப கல்யாணம் நடக்காதா?? நாங்க இலை போட வேண்டாமா??". " என்னங்க நீங்க எங்க கஷ்டம் புரியாம. அம்மாவை கடைசீயா எப்ப பாத்தீங்கன்னு மட்டும் சொல்லுங்க" என்று அதட்டும் தோரணையில் கூறினான் கந்தன்.

" இருவது இருவத்தஞ்சு நிமிஷம் இருக்கும் பா" என்றார். மறு பேச்சு பேசாமல் கெளம்பினான் கந்தன். இலை பரிமாறுவதை நிறுத்தி விடுமாறு கூறி விட்டு, இரண்டு மூன்று பேருடன் என்ன நடக்கிறது என்று பார்க்க வெளியில் வந்தார் தலைமை சமையல் காரர்.

இப்பொழுது எல்லார் மனதில் இருக்கும் ஒரே கேள்வி, "கல்யாணி எங்கே??" எனபது தான். மண்டபத்தில் இருக்கும் ஒரு சிலருக்கு, ஒரு வாராக என்ன நடக்கிறது என்றும் புரிந்து விட்டது.

மணமகள் அறையில்...

அபிராமியின் கணவர் "ஒரு வேளை கல்யாணத்த நிறுத்தனும்னு யாரவது இவள தூக்கிட்டு போய்டாங்களோ?? ச என்னமா ஐடியா பண்ணி இருக்காங்க" என்றார்.

அபிராமி ஒரு முறை முறைத்ததும் "இல்ல மா நான் என்ன சொல்ல வரேன்னா..." "நீங்க சொன்னதே போதும் பேசாம இருங்க" என்றாள் அபி.

அந்த நேரத்தில் மாணிக்கத்தின் கைப் பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. "ஏதோ முன் பின் தெரியாத எண்" என்றார் மாணிக்கம். எல்லாரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க. "அந்த காலை அட்டென்ட் பண்ணுங்க பா" என்றான் கந்தன். "தைரியமா பேசுங்க" என்றார் மாமா.

பதட்டத்துடன்... "ஹலோ" என்றார் மாணிக்கம். மறு முனையில் பேசிய குரலை கேட்டு செய்வதறியாது முழித்தார் மாணிக்கம்.

Thursday, November 4, 2010

அம்மாவைக் காணோம்! - 1

" 9 முதல் 10 .30 முஹூர்த்தம். இன்னும் 10 நிமிஷம் கூட இல்ல ஒன்பது மணி ஆக. இன்னும் அம்மாவும் பொண்ணும் என்ன தான் பண்ணிட்டு இருக்கா?? " என்று பதட்டத்துடன் தன் பையனை பார்த்து வினவினார் மாணிக்கம்.
"அம்மா காலை டிப்பனை நிறுத்திக்கலாம்னு சமையல் காரங்க கிட்ட சொல்ல பொய் இருக்காங்க. நித்யா எப்பவும் போல கண்ணாடி முன்னாடி நின்னு அழகு பாத்து, பாத்து மேக் அப் பண்ணிக்கிட்டு இருக்கா." என்று கூறிக்கொண்டே மணமகள் அறையை நோக்கி நடந்தான் கந்தன்.

டொக்! டொக்! (அவன் மணமகள் அரைக் கதவை தட்டும் சத்தம்)
உள்ளே... "யாரு அது நேரம் காலம் தெரியாம கதவத் தட்டிட்டு??" என்றது ஒரு குரல். "யாரா இருந்தாலும் ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணட்டும்" என்றது இன்னொரு குரல். "இந்த ஆம்பளைங்களே இப்படி தான் பொறுமையே கெடயாது" என்று கூறிக் கொண்டே லேசாக ஒரு கண் மட்டும் தெரியும் அளவிற்கு கதவை திறந்தாள் ஒரு பெண்.

"நீ தானா! கந்தா என்ன வேணும் உனக்கு இப்ப?"
"முடிக்க வேண்டிய சடங்கு எல்லாம் அப்படியே இருக்கு, இங்க உங்க மருமக என்ன தான் பண்ணிட்டு இருக்கா?? அப்பா பதட்டதோட வெளிய இருக்கார். பண்ணின வரைக்கும் போதும் வெளிய வர சொல்லுங்க."
"வருவா வருவா இன்னும் 10 நிமிஷம். டச் அப் நடக்குது. முடிஞ்சதும் நானே கூட்டிட்டு வரேன்னு உங்க அப்பன் கிட்ட சொல்லு. சும்மா கெடந்து குதிக்காம மேடை மேல போய் நிக்க சொல்லு."

"அது இல்ல அத்த ..."
"சொல்றது காதுல கேட்டுச்சு ல பத்து நிமிஷம் வரலேனா திரும்ப வந்து பாரு டா வெட்டி பயலே" என்று சொல்லி முடிக்கும் முன்பே கதவை சாத்தினாள் கந்தனின் அத்தை.

தலை சொரிந்த வாறே வேறு வழி இல்லாமல் அப்பாவிடம் நடந்தவற்றை எல்லாம் கூறினான். "அக்கா சொல்லுக்கு மறு பேச்சு ஏது?? சரி நீ போய் உங்க அம்மாவை சீக்கிரமா மேடைக்கு வர சொல்லு" என்று கூறி விட்டு மேடையை நோக்கி நடந்தார்.

"மாமா எல்லாரையும் கூட்டிகிட்டு மேடைக்கு போங்க. இங்கயே உக்காந்துட்டு இருக்கணும்னு உங்க பொண்டாட்டி சொன்னாங்களா?? "
"அட நீ வேற ஏன் டா அவள நல்ல மூட்-ல இருக்கும் பொது ஞாபக படுத்தற?? எங்கயாவது உன் பின்னாடி ஒளிஞ்சு இருந்து கேட்டுட போறா.." என்று கூறிய வாறே கந்தனின் பின்னாடி எட்டிப் பார்த்தார் அவன் மாமா.

தன் உறவினர்களை ஒவ்வொருவராக மேடை அருகே செல்லுமாறு கூறி விட்டு, தெரிந்தவர்களிடம் காலை சிற்றுண்டி ஓவரா என உரிமையுடன் விசாரித்தார்.

"கந்தா கந்தா இங்க வா டா" வாசல் அருகே இருந்து சித்தியின் குரல் கேட்டு அந்த திசையை நோக்கி நடந்தான். வழியிலேயே அவன் தெரிந்து கொண்டான் அவன் நண்பர்கள் சிலர் வந்திருந்தனர். "வாங்க டா வாங்க, நல்லா சீக்கிரம் வந்தீங்க டா. போங்க போய் முதல்ல இட்லி அ பிச்சு போடுங்க அப்புறமா நம்ம கடலைய வெச்சுக்கலாம். எல்லாரும் சாயங்காலம் வரைக்கும் இருந்துட்டு தான் போகணும்". என்றவன் அவர்களை அழைத்துக் கொண்டு dining hall -ஐ நோக்கி நடந்தான்.

உள்ளே நுழைந்தவன் "அம்மா, நீ இங்க தான் இன்னும் இருக்கியா? prime minister -அ கூட பாத்துடலாம் போல, ஆனா காலேல இருந்து உன்ன தான் பாக்கவே முடியல." "என்ன டா பண்றது செல்லப் பொண்ணோட கல்யாணமாச்சே. எந்தக் கொறையும் வந்துடக் கூடாது. உங்க அப்பா வேற ஒரு டென்ஷன் பார்ட்டி." என்று சிரிப்பும், கேள்விக்குறியும் கலந்த ஒரு புன்னகை குடுத்தாலள் கல்யாணி.
"இவங்க எல்லாம் என்னோட ஆபீஸ்-ல வேல பாக்கறவங்க மா. இவங்களுக்கும் டிபன் போட சொல்லு."
"அடடே வாங்க வாங்க! என்ன இவ்வளவு லேட்-ஆ வந்து இருக்கீங்க?
சாயங்காலம் வரைக்கும் இருந்துட்டு தான் போகணும்."
"கண்டிப்பா மா இது நம்ம வீட்டு கல்யாணம் மாதிரி" என்றான் கூட்டத்தில் ஒருவன்.
" மாஸ்டர் இவங்க எல்லாம் என் பையனோட friends இவங்கள நல்லா கவனிச்சுக்கோங்க" என்று அங்கே தலைமை ஆளிடம் கொஞ்சம் அதிகாரம் கலந்த தோரணையில் கூறினாள் கல்யாணி.

"ஆமாம் எங்க டா அந்த தடி பசங்க ராமு, பாபு, குமார் மூணு பெரும்??"என்று கல்யாணி கேட்டு முடிப்பதற்குள், "இதோ வந்தாச்சு மா"என்று கூறிக் கொண்டு பளிச் புன்னகையுடன் dining ஹாலுக்குள் நுழைந்தனர். கையை ஓங்கியவாறே "ஏன் டா தடி பசங்களா இது உங்க தங்கச்சி கல்யாணம்கறது மறந்து போச்சா? எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சுட்டு கல்யானத்தன்னிக்கி லேட்- அ வரர்தா??"

"சாரி மா கொஞ்சம் தானே லேட் ஆச்சு அதான் ஒன்பது மணிக்குள்ள வந்துட்டோமே." "சரி சரி வள வளநு பேசாம போய் சாப்டுங்க. டிபன் கடைய இன்னும் பத்து நிமிஷம் extend பண்ண சொல்லி இருக்கேன். சீக்கிரமா போய் சாப்டுட்டு வாங்க"

" டாய் கந்தா இவங்கள எல்லாம் பக்கத்துல இருந்து கவனிச்சுக்க" என்று கூறியவள் பரபரப்புடன் சம்மந்தி இருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள். " நீங்க எல்லாரும் டிபன் சாப்டாச்சு தானே?? இன்னும் பத்து நிமிஷத்துல நான் டிபன் அ நிறுத்த சொல்லலாம்னு இருக்கேன். உங்கள் வீட்டுல யாரவது இன்னும் வரணுமா? சம்மந்தி" என்று கேட்டவளை நோக்கி " காலேல இருந்து இதையே நீங்க மூணாவது தடவ எங்க கிட்ட கேக்கறீங்க. உங்க உபசரிப்ப பாத்து நாங்க எல்லாம் மூக்கு மேல வெரல வெச்சுட்டோம்" என்று சிரித்த படியே சொன்னாள் மாலா.

இப்படி ஒத்துப் போகும் சம்மந்திகளா என்று அங்கிருந்தவர்கள் வயிறு பற்றி எரிவது தெரியாமலே இருவரும் ஒருவர் கை பிடித்து இன்னொருவர் அறையை விட்டு வெளியே வந்து மண மேடையை நோக்கி நடந்தனர்.

"ஆமாம் நித்யா எங்க?? இன்னும் ரெடி ஆகலையா??" "என்னிக்கு உன் பொண்ணு டயத்துக்கு ரெடி ஆகி இருக்கா?? நீயே போய் பாரு" என்றார் மாணிக்கம்.

"வேண்டாம் வேண்டாம் அதோ என் பொண்டாட்டி உங்க பொண்ண கூட்டிகிட்டு வரா" என்றார் மாமா முத்து. அந்த மண்டபத்தில் இருக்கும் அனைவரும் அசந்து போகும் வண்ணமும், மாப்பிள்ளை பார்த்த இடத்திலேயே மயங்கி விழுந்துவிடும் அளவிற்கும், அன்று அவள் தான் ராணி மற்றவர் யாரும் அவள் அருகில் கூட நிற்க முடியாது என்ற அளவிற்கு தன்னை அழகு படுத்திக் கொண்டிருந்தாள் நித்யா.

"இந்த செவப்பு செல உங்க மருமக நிறத்துக்கு மிக எடுப்பு. பாத்தா எடத்துலயே பட்டுன்னு உங்க பையன் விழுந்துடப் போறான்" என்றார் நய்யாண்டியாக உறவினர் சிலர். அதைக் கேட்டு மற்ற மாமியாரை போல் பொறாமை கொள்ளாமல் பெருமிதம் கொண்டாள் மாலா.

ஒரு சில நிமிடங்கள் நடக்க வேண்டிய சடங்குகள் எல்லாம் முடிந்த பின். கூரைப் புடவையை குடுத்தனர். அவர்களின் சம்பிரதாயப் படி "நூல் சேலையே" அணிய வேண்டும். ஆகவே ஒரு மஞ்சள் நிற காட்டன் புடவையும் அதற்க்கு எதார் போல் ரவிக்கையும் இருந்தது அந்த தட்டில். அதைப் பெற்றுக் கொண்டு அங்கே இருந்து உடை மாற்ற மணமகள் அறைக்கு சென்றாள். கூடவே அம்மா, மாமி மற்றும் சில உறவினர்களும் சென்றனர்.

அய்யர் "பத்து நிமிஷத்துக்குள்ள வர சொல்லுங்க. ரொம்ப லேட் பண்ணிட போறாங்க" என்றார்.
"இவ பண்ணற கூத்து அய்யருக்கு கூட தெரிஞ்சு போச்சு பா" என்றான் கந்தன்.

எல்லாரும் கல கலவென சிரிக்க நித்யா மட்டும் கோபமும் சிரிப்பும் கலந்த உணர்ச்சியை வெளிப் படுத்தினாள். "அண்ணி நான் சமையல் காரங்களுக்கு ஏதாவது வேணுமான்னு கேட்டுட்டு வந்துடறேன். நீங்க கொஞ்சம் இவள பாத்துக்கங்க" என்றாள் கல்யாணி.
எல்லா பெண்களும் அறையில் நுழைந்து கதவை சாற்றியதும், சமையலறையை நோக்கி நடந்தாள் கல்யாணி.
"என்ன எல்லாம் ரெடி தானே?? தாலி கட்ட இன்னும் இருவது முப்பது நிமிஷம் தான் இருக்கு. தாலி கட்டின ஒடனே இங்க எலையப் போட்டுடனும் தெரிஞ்சுதா??" என்றாள்.
"எல்லாம் ரெடி ஆ இருக்கு மேடம். நீங்க வேணும்னா ஏதாவது ருசி பாக்கறீங்களா??" என்றார் ஹெட் குக்.
"இல்ல இல்ல எனக்கு தலைக்கு மேல வேல இருக்கு இந்தப் பக்கம் எட்டி பாத்துட்டு போலாமேன்னு வந்தேன்" என்று சொல்லிக் கொண்டே சமையல் அறையின் வாசலை அடைந்தாள்.
"இந்த அம்மாவுக்கு இதே பொழப்பா போச்சு இதோட பத்து தடவ வந்துட்டாங்க..." என போலம்பிக்கொண்டே வேலையே முடுக்கி விட்டார்.

பத்து நிமிடங்கள் கழித்தும் மணப் பெண் வராததால் அவளை சென்று பார்க்க மீண்டும் கந்தன் பலி ஆடாக கேளம்பினான். பத்து பெண்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு அவன் படும் பாடு அவனுக்கு தான் தெரியும். முனகிக் கொண்டே சென்றான்.


சமயலறையில்...
"டேய்! சின்னவனே இங்க ஒரு பை இருக்கு அதுல முந்திரி, காய் கரி, நெய், அரிசி எல்லாம் எடுத்து வெச்சு இருக்கேன். நீயும் பெரியவனும் பின் பக்கமா பொய் வீட்டுல இதக் குடுத்துட்டு வந்துடுங்க டா" என்றார் ஹெட் குக்.
"இதோ வரேன் பா, அங்க அம்மாவுக்கு காபி குடுத்துட்டு வந்துடறேன்" என்று டம்ளர்-இல் காபியை எடுத்துக் கொண்டு குடு குடுவென ஓடினான்.
"எந்த அம்மாக்கு டா இப்ப காபி கொண்டு போற?? காபி நேரமெல்லாம் முடிஞ்சு போச்சே?? இங்க வேற, இருக்கற அதனை பொம்பளைங்களும் ஆட்சி செய்யறாங்க. வாயத் தொறந்துஒண்ணும் பேச முடியல" என்று அலுத்துக் கொண்டார்.

"வந்துட்டேன் பா" பை எங்க?? தாலி கற்றதுக்குள்ள வந்துடணும்" என்றவன் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடினான்.
"contract விடாம எல்லாத்தையும் அவங்களே வாங்கிக் குடுத்தா நமக்கு இப்படி தான் நெறைய கஷ்ட்டம். எல்லாம் அந்த ஓரமா இருக்கு. யாரவது ஏதாவது கேட்டா குப்பை அது இதுன்னு சொல்லி சமாளிச்சுக்காங்க. யார் கண்ணுலயும் படாம போங்க டா" என்றார். பெரியவன் வண்டியில் காத்துக் கொண்டிருக்க, சின்னவனும் பையுடன் அவனை அடைந்தான்.

மணமகள் அரை...
"இந்தா இந்த காபி அ குடி எவ்வளவு வாட்டி சொல்றது நித்யா உனக்கு?? அப்பவே கொண்டு வந்து வெச்சாச்சு. தண்ணி மாறி ஆயிடுச்சு. வெறும் வயிரா இருந்தா அபசகுனமா மயக்கம் போட்டு தான் விழனும். நான் சொல்றத நீயாவது கேளு. உங்க மாமா மாறி படுத்தாத " என்றாள் அத்தை.
அந்தக் காபியை வாங்கி மேக் அப் கலையாமல் வாயில் பட்டும் படாமல் ஊற்றிக் கொண்டாள்.

"சரி மேடைக்கு கெளம்பலாம் இல்லேனா உன் அண்ணன் திரும்ப வந்துடுவான்." என்றார் அத்தை. வாசலில் இருந்த சித்தியை அழைத்துக் கொண்டு மண மேடைக்கு வந்தான் கந்தன். மணப் பெண்ணும் வர அய்யர் "பொண்ணோட அம்மாவை கூப்டுங்கோ" என்றார்.

"கல்யாணி எங்க?? இந்த நேரம்பாத்து எங்க போனா??" என்றார் மாணிக்கம். "சமையல் அறைக்கு போறேன்னு சொன்னாளே இன்னுமா இங்க வரல?" என்றார் அத்தை.

"இல்லையே அக்கா நாங்க, உங்க கூட இருக்கறதா இல்ல நெனசுக்கிட்டோம்?" என்று மாணிக்கம் கூற. ராமுவை அனுப்பி சமயலறையில் இருக்கும் அம்மாவை அழைத்து வருமாறு கந்தன் கூறினான். 10 -எ வினாடியில் அங்கே அம்மா இல்லை என்று கூறிக் கொண்டே வந்தான் ராமு.

"என்னது அம்மா அங்க இல்லையா? நல்ல பாத்தியா??" "ஆமாம் சமையல் காரர் அப்பவே போய்டதா சொல்றார்."

" சரி திரும்ப ஒரு வாட்டி எல்லா எடத்துலயும் பொய் பாத்துட்டு வாங்க பா" என்றார் சித்தி.

"குமார் நீ பொய் சமையல் கட்டுல பாரு, நீ மாடில பாரு ராமு, நீ மொட்ட மாடில பாரு டா பாபு நான் இங்க பாக்கறேன்" என்று சொன்னான் கந்தன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கமாய் போய் பார்க்க. கூட்டத்தில் இருகிராளா என்று தேடினார்கள் உறவினர்கள்.

கந்தன் "அம்மா எந்த ரூம்லயும் இல்ல அத்த" "டை கந்தா உங்க அம்மா கிட்சேன்-ல இல்ல டா, அப்பவே போய்டதா அந்த சமையல் காரர் சொல்லறார்." "மாடிலையும் இல்ல. மொட்ட மாடிலையும் இல்ல" என்றது இரண்டு குரல்.

"அப்ப கல்யாணி எங்க தான் போனா??" என்று பதட்டத்துடன் கேட்டாள் அத்தை. வெளியே எங்காவது சென்றிருக்கிராளா என்று பார்த்து விட்டு வரும் படி கந்தனை அனுப்பினாள். கல்யாணி வாசல் பக்கமே வரலை என்று அங்கே இருந்தவர்கள் கூற பதட்டத்துடன் வந்து "அம்மாவைக் காணம்!" என்றான் கந்தன்.

என்ன டா இது வந்த உடனே தொடர் கதையோ அல்லது மர்மக் கதையோ எழுத ஆரம்பிச்சுட்டா-நு நேனைக்காரவங்க "wait and watch! :P ". அடுத்த பதிப்பில் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது ஹரிணி ஸ்ரீ! ஹரிணி ஸ்ரீ!! ஹரிணி ஸ்ரீ!!!

சாரி போர் தி ப்ரீக்! (Sorry for the Break!)

இத்தனை நாளாக சொந்த வேலைகளில் பிஸி-ஆக இருந்த நான் "வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்..." அப்டீன்னு பாடிண்டே வந்து இருக்கேன். ஹலோ ஹலோ எங்க எல்லாரும் ஓடறீங்க??? நான் பாடறது உங்களுக்கு கேக்காது, கவலை படாம மேல படியுங்க...

"அப்படி என்ன சொந்த வேலை???" அப்டீன்னு நீங்க முணு முணுக்கறது என் காதுல விழர்து. "ஒன்றா ரெண்டா வேலைகள் எல்லாம் சொல்லவே ஒரு போஸ்ட் போதுமா??" போதாது தான்...

இருந்தாலும் என் மேல பாசம் வெச்சு சளைக்காம எனக்கும் ஒரு ப்ளாக் இருக்குனு அடிக்கடி நினைவு படுத்தின ஜெய்லானி-காகவும் (என் ப்ளாக்-அ ஏலம் போடப் போறதா கூட அவர் மேரட்டினார். அதுக்கு கூட நான் அசரல! :D), நான் இப்ப எழுதலாம்னு இருக்கேன்; அப்ப எழுதலாம்னு இருக்கேன்னு சொன்னதெல்லாம் அப்டியே நம்பின lk -அண்ணாகாகவும், எப்ப பாரு என்ன வெச்சு நக்கல் பண்ணிண்டு இருக்கற தக்குடுகாகவும் உண்மைய சொல்லிடறேன்.

முதல்ல நல்ல செய்தி எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆக போறது. இதுனால தான் நான் ப்ளாக் பக்கமே வரது இல்லன்னு யாரவது வதந்தி கெளப்பி விட்டா அத எல்லாம் நம்பாதீங்க. கொஞ்ச நாள் எனக்கு ஒடம்பு சரி இல்லாம இருக்கும், கொஞ்ச நாள் என் கணினி-க்கு ஒடம்பு சரி இல்லாம இருக்கும். இப்படியே நாட்கள் வாரங்கள் ஆகா வாரங்கள் மாதங்கள் ஆயிடுத்து! இதை தவிர வேறு சில தவிர்க்க முடியாத காரணங்களும் உண்டு.

என் ப்ளாக்-அ விடாம வந்து பாத்தவங்களுக்கும், என்னை போஸ்ட் போடுமாறு அடிக்கடி கேட்டவங்களுக்கும் நான் சொல்றது ஒண்ணே ஒண்ணு தான் "இனிமே இந்த மாதிரி தடை வராம இருக்க முயற்சிக்கறேன். உங்கள் பொறுமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து என் ப்ளாக்-ஐ படிக்க வாருங்கள்"

நான் படிக்காம விட்ட போஸ்ட்-ஐ எல்லாம் இந்த ஒரு வாரதுக்குள்ள படிச்சு முடிசுடவும் திட்டமிட்டு இருக்கேன். ஆரம்பத்தில் வாரத்திற்கு ஒரு போஸ்ட்-ஆவது போட முயற்சிக்கிறேன். தொடர்ந்து என் ப்ளாக்-இற்கு வந்து ஆதரவு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் (இது என் சொந்த வசனம். காபி அடித்தது அல்ல)

பி.கு. தலைப்பில் உள்ள எழுத்துப் பிழையை பார்த்தவர்களுக்கு மட்டும் (ஒடனே போங்காட்டம் ஆட கூடாது :P )
அது வேண்டுமென்றே செய்யப் பட்டது. சிறிய வயதில் நான் அப்படி தான் "sorry for the break "-ஐ படிப்பேன். தொடர்ந்து சந்திப்போம். இப்படிக்கு ஹரிணி ஸ்ரீ